சவுதி ஏமனை தாக்கியதன் எதிரொலி: சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

ரியாத்: ஏமன் மீது சவுதி அரேபியா தலைமையில் அரபு நாடுகள் தாக்குதல் நடத்தியதையடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை ஒருநாளில் 5 சதவீதம் அதிகரித்தது.

ஏமனில் ஈரான் துணையுடன் ஷியா பிரிவைச் ஹவுத்தி போராளிகள் சன்னி பிரிவைச் சேர்ந்த அந்நாட்டு அதிபர் மன்சூர் ஹதிக்கு எதிராக உள்நாட்டு போர் நடத்தி வருகிறார்கள். போராளிகள் தலைநகர் சனாவை கைப்பற்றியதும் அதிபர் மன்சூர் ஏடன் நகருக்கு சென்று அந்நகரை தலைநகராக அறிவித்தார்.

இந்நிலையில் ஏடன் நகரை போராளிகள் கடந்த வாரம் தாக்கினர். இதையடுத்து மன்சூர் அந்த நகரில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. ஏமனுக்கு அருகில் உள்ள சன்னி முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சவுதி, ஜோர்டான் ஆகிய நாடுகள் மன்சூருக்கு ஆதரவளித்துள்ளன.

Oil prices increase after Saudi hits Yemen

இந்த சூழலில் சவுதி அரேபியா தலமையில் சில நாடுகள் நேற்று ஏமனில் போராளிகளின் இடங்கள் மீது வான்வெளித் தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தை அடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நேற்று ஒரே நாளில் 5 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஏமன் மீதான தாக்குதல் பெரிதாகி மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எண்ணெய் ஏற்றுமதி செய்வது பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் தான் எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளது. இதற்கிடையே சவுதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகள் தங்களின் எண்ணெய் கிணறுகளுக்கு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+