டிசிஎஸ் ஊழியர்களுக்கு Work From Home.. நாசிக் அலுவலகம் முன் போராட்டம் - வீடியோ

Subscribe to Oneindia Tamil

டிசிஎஸ் விவகாரத்தை தொடர்ந்து இன்போசிஸ், டெக் மஹிந்திரா நிறுவனத்திலும் இதேபோன்ற புகார்கள் எழுந்த நிலையில் இந்தியாவில் முன்னணி ஐடி நிறுவனங்களில் பணியாளர்களின் பாதுகாப்பு, பணியிடம் ஒழுங்குமுறை மற்றும் புகார் அமைப்புகள் சரியாக இயங்குகிறதா என்பதில் பெரும் கேள்விகள் எழுந்துள்ளது.

இன்போசிஸ், டெக் மஹிந்திரா மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை இந்த நிறுவனங்கள் முழுமையாக மறுக்கப்பட்டாலும் இதுதொடர்பான பதற்றம் குறையவேயில்லை. இந்தியாவில் டாப் 5 நிறுவனத்தில் சுமார் 10 லட்சம் ஊழியர்கள் பணியாற்று வருகின்றனர், இதில் பெரும் பகுதியினர் பெண்கள், குறிப்பாக கல்லூரி படிப்பை முத்து பெரும் கனவுகளுடன் வரும் பெண்கள்.

TCS TATA Work from home IT WFH TCS Nashik WFH TCS Sexual Harassment Probe Nashik TCS Office Protest TCS Employee Safety TCS Work From Home Order TCS Nashik work from home TCS Nashik sexual harassment case TCS Nashik office protest TCS employees WFH order Nashik TCS BPO unit safety TCS Ashoka Business Enclave police TCS Nashik vandalism attempt TCS April 2026 sexual harassment FIRs TCS Nashik 170 employees TCS no office sealing clarification TCS Nashik political protest TCS work from home announcement TCS Nashik investigation update TCS employee safety measure 2026 TCS Nashik branch WFH 2026 170 2026

இந்த நிலையில் டிசிஎஸ் தனது நாசிக் கிளை பணியாளர்களுக்கு தற்காலிகமாக வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளது. பாலியல் தொல்லை குறித்த விசாரணைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நிறுவனத்தின் உள்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிசிஎஸ் இத்தகைய முடிவை எடுக்க முக்கிய காரணம் அலுவலகத்தை சில உள்ளூர் அமைப்புகள் சேதப்படுத்த முயன்ற சம்பவம், இந்த அலுவலத்தில் பணியாற்றுவோர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க வேண்டும் என்பதற்காக வொர்க் ப்ரம் ஹோம் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் டிசிஎஸ் அலுவலகம் முன்பும், நாசிக் சாலைகளிலும் உள்ளூர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகிறது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

நாசிக்கில் உள்ள அசோகா பிசினஸ் என்க்ளேவ் வளாகத்தில் செயல்படும் டிசிஎஸ் BPO அலுவலகம் சுமார் 5000 சதுர அடி பரப்பளவில் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 170 பணியாளர்கள் இரண்டு வேளைகளில் பணியாற்றி வந்தனர். அலுவலகத்தை சேதப்படுத்தும் முயற்சிக்கு பன்பு தற்போது, அலுவலக நுழைவாயிலில் போலீஸ் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதுடன், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

மார்ச் மாதத்தில் ஒரு பெண் பணியாளர், திருமணம் செய்வதாக கூறி உடலுறவு வைத்ததாக தனது சக ஊழியருக்கு எதிராக புகார் அளித்தார். இதன் பின்னர் விசாரணை விரிவடைந்து, சுமார் 8 FIR-கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் தற்போது அசிஃப் அன்சாரி, ஷாஃபி ஷேக், ஷாருக் குரேஷி, ரஸா மேமன், தௌசிப் அட்டார், டேனிஷ் ஷேக் மற்றும் அஷ்வினி சைனானி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏப்ரல் 15 அன்று சைனானி நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். நாசிக் டிசிஎஸ் சம்பவம், இந்திய ஐடி துறைக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+