TCS நாசிக் விவாகரம்: யார் இந்த நிதா கான்? ஹெச்ஆர் மேனேஜர் தான் மாஸ்டர்மைன்ட்
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் நகரில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தின் 150 பேர் கொண்ட BPO அலுவலகத்தில் எழுந்துள்ள பாலியல் தொல்லை மற்றும் மத மாற்ற குற்றச்சாட்டு வழக்கில் இந்த அலுவலகத்தின் ஹெச்ஆர் மேனேஜர் நிதா கான் முக்கிய குற்றவாளியாக போலீஸ் விசாரணையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பல பெண் பணியாளர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் இந்த வழக்கு விரிவடைந்து, தற்போது தேசிய அளவில் ஐடி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சி அளிக்கு்ம விஷயமாக மாறியதுள்ளது. இது தொடர்பாக சுமார் 8 வழக்குகள், 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் இந்த வழக்குகளை விசாரிக்க SIT அமைக்கப்பட்டு உள்ளது.

யார் இந்த நிதா கான்?
டிசிஎஸ் நிறுவனத்தின் நாசிக் பிபிஓ அலுவலகத்தின் ஹெச்ஆர் பிரிவின் AGM பதவியில் பணியாற்றியவர் தான் நிதா கான். பணியாளர்களின் புகார்களை கையாளுதல் மற்றும் POSH விதிமுறைகளை அமல்படுத்துதல் இவரது முக்கிய பொறுப்பாக இருந்தது.
ஆனால், பெண் பணியாளர் மின்னஞ்சல் மூலம் அளித்த பாலியல் தொல்லை புகாரை அவர் கவனிக்காமல் விட்டதாகவும், மேலதிகாரிகளிடம் எடுத்துச் செல்லாததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால், அவர் இந்த சம்பவத்தில் 'மாஸ்டர்மைண்ட்' மற்றும் 'எனேப்ளர்' என போலீசார் சந்தேகிக்கப்படுவதாக ஃப்ரி பிரஸ் ஜர்னல் தனது செய்தியில் குறிப்பிட்டு உள்ளது.
மார்ச் 26 முதல் ஏப்ரல் 3 வரை, Deolali மற்றும் Mumbai Naka காவல் நிலையங்களில் மொத்தம் 8 FIRகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பாலியல் துன்புறுத்தல், உடல் ரீதியான தொடுதல், பாலியல் ரீதியான பேச்சுகள், பணி சுமையை அதிகரித்து அழுத்தம் கொடுத்தல், மத மாற்றத்தை கட்டாயப்படுத்துதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் அடங்கும்.
இந்த வழக்கின் விசாரணையில், சில மேனேஜர்கள் பெண்களை குறிப்பிட்ட மத நடைமுறைகளை பின்பற்ற அழுத்தம் கொடுத்ததாகவும், grooming போன்ற செயல்பாடுகள் நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழலில், நிதா கான் பெண்களுடன் நெருக்கமாக பழகி, பின்னர் மத சம்பந்தமான பழக்கங்களை அறிமுகப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நிதா கான் முதலில் தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளார் என போலீசார் விளக்கம் கொடுத்துள்ளனர். இதுவரை மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் இந்த வழக்கை மேலும் விரிவுபடுத்தி விசாரித்து வருகின்றனர்.
மகாராஷ்டிரா அமைச்சர் கிரிஷ் மகாஜன் கூறுகையில், நாசிக் அலுவலகத்தில் பணியாற்றிய மூத்த மேலாளர், பாதிக்கப்பட்ட பெண்களை நமாஸ் செய்ய வற்புறுத்தியதாகவும், மாட்டிறைச்சி சாப்பிடவும் வற்புறுத்தி, அவர்களை மத மாற்றம் செய்ய முயன்றதாக கூறியுள்ளார்.
-
டிசிஎஸ் நாசிக்: 30 நாள் போலீஸ் அன்டர்கவர் ஆப்ரேஷன்.. அடுத்தடுத்து வெளியான திடுக்கிடும் தகவல்! -
இந்தியாவை உலுக்கிய டிசிஎஸ் நாசிக் ஆபீஸ்.. நேரடியாக தலையிட்ட டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
IT Jobs: 7 பிரிவுகளில் காலியிடங்கள்.. டிசிஎஸ் தரும் சூப்பர் சான்ஸ்.. ஏப்ரல் 18-ல் இண்டர்வியூ -
IT Jobs:ஐடி வேலை ரெடி.. அழைக்கும் TCS நிறுவனம். ஏப்ரல் 18 ம் தேதி சென்னையில் இண்டர்வியூ -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம்













Click it and Unblock the Notifications