Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

40 வருடங்களில் இல்லாத அளவு குறைந்தது வீட்டு சேமிப்பு விகிதம்! காரணம் என்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் குடும்ப நிதி நிலையின் அடிப்படையில், சேமிப்பு மிக முக்கியமானதாகும். எதிர்காலத் தேவைகள், கல்வி மற்றும் பாதுகாப்பான ஓய்வுகாலம் ஆகியவற்றிற்கு சேமிப்பு முக்கியமானது. ஆனால், தற்போது வீட்டு சேமிப்பு விகிதத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இது குறைந்துள்ளது.

2011-12 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 34% ஆக இருந்த வீட்டு சேமிப்பு விகிதம், தற்போது 29.7% ஆக குறைந்துள்ளது. இந்திய வீடுகளில் ஏற்பட்டுள்ள நிதி பழக்கவழக்க மாற்றங்களால் சேமிப்பில் வீழ்ச்சி நிகழ்ந்துள்ளது.

saving bank business

பொருட்களை வாங்கி குவிக்கும் மனநிலையிலான நுகர்வு அதிகரிப்பு மற்றும் அதிக மதிப்புள்ள சொத்துக்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரித்துள்ளதால், பலர் இதுவரை கடைபிடிக்கப்பட்ட சேமிப்பு முறைகளை விட்டுவிட்டு, அசையா சொத்துக்கள் பக்கம் திரும்பியுள்ளனர். அதிக வருமானத்தின் மீதான ஆசையால் மக்கள் பங்குச் சந்தை மற்றும் பரஸ்பர நிதி திட்டங்களில் அதிக முதலீடு செய்கின்றனர்.

அரசு அமைப்புகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இரண்டும் நாட்டில் சேமிப்பு கலாச்சாரத்தை புதுப்பிக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. சிறுசேமிப்பு திட்டங்களை மேம்படுத்துதல், சேமிப்பு பழக்கங்களை ஊக்குவித்தல், பொது சேமிப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் தற்போதுள்ள சமூக நலத் திட்டங்களுடன் சேமிப்பு திட்டங்களை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றின் மூலம் இதை சாத்தியப்படுத்த முடியும்.

சேமிப்பு சரிவுக்கான காரணங்கள்:

மக்களிடையே பங்குச் சந்தை, பரஸ்பர நிதிகள், ரியல் எஸ்டேட் போன்ற பல்வேறு முதலீட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரித்துள்ளது. அதேநேரம், குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது. ஒழுங்கான சேமிப்பு இல்லாததால், அவர்கள் நிதி நெருக்கடிகளுக்கு ஆளாக நேரிடலாம். கடன் தேவைக்காக தனிப்பட்ட கடன்களை நம்புவது இந்த ஆபத்தை அதிகரிக்கிறது. இதனால் கடன் அதிகரிப்பதுடன் சேமிப்பு திறனும் குறைகிறது.

சேமிப்பு திட்டங்களை ஊக்குவிக்க நடவடிக்கைகள்:

இந்தியாவில் சேமிப்பு வீழ்ச்சியை மாற்ற ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம். மக்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் நுண்சேமிப்பு திட்டங்களை செயல்படுத்துதல், ஊக்கத்தொகைகள் மூலம் சேமிப்பை ஊக்குவித்தல் மற்றும் பொது சேமிப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் ஆகியவை எதிர்காலத்திற்கான வழிவகுக்கும்.

சேமிப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்துவதில் அரசு, நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையின் கூட்டு முயற்சி மிகவும் முக்கியம். இத்தகைய கூட்டு முயற்சிகள் உடனடி சவாலை எதிர்கொள்வது மட்டுமல்லாமல், மாறிவரும் சமூக-பொருளாதார சூழலுக்குத் தகவமைத்துக்கொள்வதற்கும் முக்கியமானவை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+