ஹரியானாவில் “யூ-டர்ன்” அடித்த பாஜக.. கடைசி நிமிடத்தில் வேட்பாளர் திடீர் வாபஸ்.. பின்னணி என்ன?
சண்டிகர்: ஹரியானா மாநில சட்டசபைக்கு வரும் அக்டோபர் 5ம் தேதி தேர்தல் நடக்கிறது. அனைத்துக் கட்சியினரும் தேர்தல் பணிகளில் மும்முரமாக களம் இறங்கி உள்ளனர். இந்நிலையில், ஹரியானா தேர்தல் களத்தில் இருந்து பாஜக வேட்பாளர் திடீரென பின்வாங்கி உள்ளார். சிர்சா தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கிய ரோஹ்தாஷ் ஜாங்ரா வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளார்.
ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் அக்டோபர் 5ஆம் தேதி நடைபெறுகிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 46 இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சி கட்டிலில் அமரும். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கடந்த 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் முடிந்து, இன்று வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளாக இருந்தது.

ஹரியானாவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அதுவும் தொடர்ந்து 2வது முறையாக ஆட்சிக் கட்டிலில் உள்ளது. இந்த சூழலில் ஹரியானாவில் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. ஹரியானா மாநிலம் முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
பாஜகவிற்கு எதிரான விவசாயிகள் போராட்டம், மல்யுத்த வீரர்கள் போராட்டம் ஆகியவற்றை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. சமீபத்தில் கூட மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் காங்கிரஸில் இணைந்தனர். வினேஷ் போகத்துக்கு சீட்டும் கொடுத்துள்ளது காங்கிரஸ் கட்சி.
இந்நிலையில் சிர்சா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ரோஹ்தாஷ் ஜாங்ரா போட்டியில் இருந்து பின்வாங்கி உள்ளார். அவர் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளார். சிர்சா தொகுதியில் ஹரியானா லோக்ஹித் கட்சியின் தலைவர் கோபால் கண்டாவுக்கு பாஜக தலைமை ஆதரவு தெரிவித்துள்ளதால், பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்த ரோஹ்தாஷ் ஜாங்ரா வாபஸ் பெற்றுள்ளார்.
இது குறித்து ரோஹ்தாஷ் ஜாங்ரா கூறுகையில், "நான் எனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுவிட்டேன். ஹரியானா மாநிலம் மற்றும் நாட்டின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளேன். காங்கிரஸ் அல்லாத ஹரியானா என்பதே எங்கள் இலக்கு" என்று தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தலில் சிர்சா தொகுதியில் வென்ற கோபால் கண்டா பின்னர் பாஜக அரசுக்கு ஆதரவு அளித்து வந்தார். இதையடுத்து இந்த முறை, தாங்கள் போட்டியிடாமல் கோபால் கண்டாவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது பாஜக. இம்முறையும் அங்கே கோபால் கண்டா போட்டியிடுவதால் வெற்றி பெற்றால் பா.ஜ.கவை ஆதரிப்பார் என்று கூறப்படுகிறது. சிர்சா தொகுதியை தவிர்த்து மற்ற 89 தொகுதிகளில் பாஜக தனித்தே களம் காண்கிறது.
-
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்?












Click it and Unblock the Notifications