யாரு.. ராகுல் காந்தியா? அவரு 'டிஸ்னி லேண்ட்' இளவரசராச்சே.. என்ன பாஜக இப்படி சொல்லுது?
சண்டிகர்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை 'டிஸ்னி லேண்ட்' (Disney Land) இளவரசர் என பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக் விமர்சித்திருப்பது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தன்னை அனைவரும் வழிபட வேண்டும் என ராகுல் காந்தி கூறியதற்கு பதிலளித்து பேசிய தருண் சுக், அவரை இவ்வாறு விமர்சித்தார்.
மேலும், ஊழல், கலவரம் போன்ற வரலாறுகளை கொண்ட ஒரு கட்சியின் தலைவரின் வாயில் இருந்து கடவுள், வழிபாடு போன்ற வார்த்தைகள் வரக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மோடியை விமர்சித்த ராகுல்
பாரத் ஜோடோ யாத்திரை ஹரியானா மாநிலம் குருஷேத்ராவுக்கு இன்று காலை வந்தது. இதையடுத்து அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார். இந்திய மக்கள் மத்தியில் வெறுப்பை விதைத்து அதன் மூலம் மோடி குளிர்காய்வதாகவும், இந்திய மக்கள் அனைவரும் தன்னை கடவுளாக நினைத்து வழிபட வேண்டும் என்ற விருப்பம் மோடிக்கு உள்ளதாகவும் ராகுல் கூறினார். மேலும், மோடியை இவ்வாறு வழிபடும் 2, 3 பேருக்குதான் இந்தியாவில் அதிக சலுகைகளும், செல்வங்களும் கிடைக்கின்றன எனவும் ராகுல் விமர்சித்திருந்தார்.

"ராகுலால் மக்களை ஏமாற்ற முடியாது"
பாரத் ஜோடோ யாத்திரை எனக் கூறிக்கொண்டு ராகுல் காந்தி ஊர் ஊராக சென்று கோயில்களில் வழிபாடு நடத்தி வருகிறார். இந்து மதத்தையும், இந்து மதத்தினரையும் கடுமையாக விமர்சித்து வந்த ஒரு கட்சியின் தலைவரை, கோயில் கோயிலாக சென்று வழிபட வைத்திருப்பது பாஜகதான். இந்து மக்கள் முன்பு போல அல்ல. அவர்கள் விழித்துவிட்டார்கள் என ராகுல் காந்திக்கு தெரிந்துவிட்டது. அதனால் பக்தனை போல வேடம் தரித்து அவர் சுற்றி வருகிறார். ஆனால், அவர்கள் (காங்கிரஸ்) யார் என்று மக்களுக்கு தெரியும். அவர்களை ராகுலால் ஏமாற்ற முடியாது.

"டிஸ்னி லேண்ட் இளவரசர்"
2024 மக்களவைத் தேர்தலில் பிரதமராக வேண்டும் என்ற பகல் கனவில் ராகுல் காந்தி மிதந்து வருகிறார். ஆனால் அது உண்மையில் பகல் கனவுதான் என்பதை அவருக்கு யாராவது புரிய வைக்க வேண்டும். 'டிஸ்னி லேண்ட் இளவரசரை' போல சிறுபிள்ளைத்தனமாக பேசி வரும் ராகுல் காந்தியை காங்கிரஸே பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துமா என்பது சந்தேகம்தான்.

"புனிதமான சொல்லை ராகுல் உச்சரிக்கக் கூடாது"
மோடி தன்னை மக்கள் வழிபட வேண்டும் என விரும்புவதாக ராகுல் காந்தி கூறியிருக்கிறார். முதலில் ராகுல் காந்தியின் வார்த்தையில் இருந்து கடவுள், வழிபாடு போன்ற புனிதமான வார்த்தைகள் வரக்கூடாது. அராஜகம், கலவரம், ஜனநாயக படுகொலை, ஊழல், குடும்ப ஆட்சி போன்ற கீழ்த்தரமான வரலாறுகளை கொண்ட ஒரு கட்சி தலைவரின் வாயில் இருந்து இதுபோன்ற புனிதமான சொற்கள் வரக்கூடாது. இவ்வாறு தருண் சுக் கூறினார்.
-
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
ராகுல் சொல்லியும் அடங்கலையே! கூட்டணிக்குள் குண்டு வைக்கும் மாணிக்கம் தாகூர்! -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
ஶ்ரீபெரும்புதூரை குறிவைத்த விசிக.. தொகுதி மாறும் செல்வப்பெருந்தகை.. எங்கு தெரியுமா -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications