ஈயடிச்சான் காப்பி... கெஜ்ரிவால் பாணியில் பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் குறித்து சர்வே நடத்தும் காங்.
சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் குறித்து ஆம் ஆத்மி பாணியில் மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தப் போவதாக அறிவித்துள்ளது காங்கிரஸ்.
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக பகவந்த் மான் அறிவிக்கப்பட்டுள்ளார். முதல்வர் வேட்பாளர் தொடர்பாக செல்போன், வாட்ஸ்அப் மூலம் ஆம் ஆத்மி கட்சி கருத்து கணிப்பு நடத்தியது.

இக்கருத்து கணிப்பில் பகவந்த் மானுக்கு ஆதரவாக 93.3% பேர் ஆதரவளித்தனர். அத்துடன் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சித்துவுக்கு வெறும் 3% பேர்தான் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனால் கொந்தளித்துப் போன சித்து, தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தார்
இது தொடர்பாக சித்து கூறுகையில், ஜனவரி 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 21.59 லட்சம் பேரிடம் கருத்துக்களை பெற்றதாக சொல்கிறார் கெஜ்ரிவால். அதுவும் 93.3% பேர் பகவந்த் மானுக்கு ஆதரவு என்கிறார் கெஜ்ரிவால். இது அப்பட்டமான மோசடியானது என்றார்.
இந்த நிலையில் பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக தம்மை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்க வேண்டும் என சித்து விரும்புகிறார். ஆனால் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி இதனை எதிர்க்கிறார். இதனால் ஆம் ஆத்மி கட்சி பாணியில் காங்கிரஸும் இப்போது முதல்வர் வேட்பாளர் தொடர்பாக மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தப் போகிறதாம்.












Click it and Unblock the Notifications