விவசாயிகள் கோரிக்கை நிறைவேறாவிட்டால் ராஜினாமா... ஹரியானா துணை முதல்வர் எச்சரிக்கை!
சண்டிகர்: விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை(எம்எஸ்பி) உறுதி செய்யப்படாவிட்டால் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என ஹரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா தெரிவித்தார்.
விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறாவிட்டால் பாஜகவின் என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என அவர் ஏற்கனவே மிரட்டல் விடுத்து இருந்தார்.

ஹரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியை சேர்ந்த மனோகர் லால் கட்டார் முதல்வராக உள்ளார்.
அங்கு பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி) உள்ளார். இந்த கட்சியின் தலைவரான துஷ்யந்த் சவுதாலா அம்மாநிலத்தின் துணை முதல்வராக உள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹரியானாவின் ஜாட் சமூகத்தினர் இந்த போராட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். ஜேஜேபி, ஜாட் சமூகத்தினருக்கான கட்சி என்பதால், அவர்களது குறைந்தபட்ச நிர்ணய விலை (எம்எஸ்பி) மீதானக் கோரிக்கையில் ஆதரவளித்துள்ளது.
இதனால், பாஜக அரசிற்கு ஆதரவளித்து வரும் ஹரியானா எம்எல்ஏக்களுக்கும் இப்பிரச்சனையில் அழுத்தம் அதிகரித்துள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறும்படி எதிர்க்கட்சிகள் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஹரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
எம்.எஸ்.பி விவசாயிகளுக்கு உறுதியளிக்கப்பட வேண்டும் என்பதை எங்கள் கட்சியின் தேசியத் தலைவர் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார். எம்.எஸ்.பி விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.
எம்.எஸ்.பி உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றுவது தொடர்பாக மத்திய அரசு விவசாயிகளிடம் எழுத்துபூர்வ ஆதாரம் கொடுத்து உள்ளது. இதனை மத்திய அரசு செயல் வடிவில் நிறைவேற்றும் என நம்புகிறோம்.
அப்படி குறைந்த பட்ச ஆதார விலை விவசாயிகளுக்கு உறுதி அளிக்கப்பட்டவில்லை என்றால் நான் எனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அவர் கூறினார்.விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறாவிட்டால் பாஜகவின் என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என துஷ்யந்த் சவுதாலா பாஜகவுக்கு ஏற்கனவே மிரட்டல் விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications