மண்ணின் மைந்தர்களுக்கே முன்னுரிமை.. தனியார் துறையில் 75% இடஒதுக்கீடு.. ஹரியானா அரசின் அதிரடி சட்டம்
சண்டிகர்: தனியார் துறையில் மண்ணின் மைந்தர்களுக்கு 75% இட ஒதுக்கீட்டை வழங்கும் புதிய சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக அம்மாநில துணை முதல்வர் துஷ்யந்த் சவுதலா தெரிவித்துள்ளார்.
ஹரியானாவில் மண்ணின் மைந்தர்களுக்கே வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் 2019ஆம் ஆண்டு தேர்தல் எதிர்கொண்ட கட்சி ஜன்னாயக் ஜந்தா கட்சி. 90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியானாவில் 10 இடங்களை ஜன்னாயக் ஜந்தா கட்சி கைப்பற்றியது.

அதன் பின்னர் பாஜக தலைமையிலான அரசுக்கு ஜன்னாயக் ஜந்தா கட்சி ஆதரவு அளித்தது. அக்கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதலா, ஹரியானா மாநிலத்தின் துணை முதல்வராகவும் பதவியேற்றார்.
இந்நிலையில், தற்போது தனியார் துறையில் உள்ளூர் மக்களுக்கு 75% இட ஒதுக்கீட்டை வழங்கும் புதிய சட்டத்திற்கு ஹரியானா மாநில ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக துஷ்யந்த் சவுதலா தெரிவித்துள்ளார். இது மாநிலத்திலுள்ள அனைத்து இளைஞர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்றும் இனி அனைத்து தனியார் நிறுவனங்களிலும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இட ஒதுக்கீட்டைப் பெறுவார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்தச் சட்டத்தின்படி, ஒரு தனியார் நிறுவனத்தில் 50,000 ரூபாய் கீழ் ஊதியம் பெறும் வேலைகளில் 75%, உள்ளூர் மக்களுக்கே வழங்க வேண்டும். இச்சட்டம் அமலுக்கு வந்த மூன்று மாதங்களுக்குள், இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஒரு குறிப்பிட்ட வேலைக்கு ஏற்ற நபர்கள் மாநிலத்தில் கிடைக்கவில்லை என்றால் அந்தச் சமயத்தில் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களை வேலைக்கு எடுத்துக்கொள்ளலாம். இந்தச் சட்டத்திற்குக் கடந்தாண்டு ஹரியானா அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.
-
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications