60 வயது பாட்டியை கூட விடவில்லை.. கொடூரமாக வன்புணர்வு செய்த 27 வயது இளைஞன்.. 20 ஆண்டுகள் சிறை
சண்டிகர்: சண்டிகரில் கடந்த 2018ம் ஆண்டு மனநலன் பாதிக்கப்பட்ட 60 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 27 வயது இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, "வயதானவர்களையும், மனநலன் பாதிக்கப்பட்டவர்களையும் மரியாதையுடன் நடத்தும் நமது பாரம்பரியத்தை குற்றவாளி மீறியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறியுள்ளார்.
குற்றவாளிக்கு சிறை தண்டனையுடன் ரூ.35,000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

வீடியோ
சண்டிகரில் உள்ள கிஷன்கரில் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 27 வயதான சந்தீப் சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு, அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்து வீட்டினுள் இருந்த மனநலன் பாதிக்கப்பட்ட 60 வயது மதிக்கத் தக்க மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மூதாட்டியினுடைய மகனின் நண்பனான சிறுவன் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்துள்ளார். இதனையடுத்து சம்பவம் வெளிசத்திற்கு வந்துள்ளது.

பாலியல் பலாத்காரம்
நீண்ட நேரம் கதவை தட்டியும் யாரும் கதவை திறக்காததால் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது இளைஞர் ஒருவர் தனது நண்பனின் தாயை பாலியல் பலாத்காரம் செய்துகொண்டிருந்ததை பார்த்து சிறுவன் அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதனையடுத்து வெளியே வந்த அந்த இளைஞன் சிறுவனை தள்ளிவிட்டு ஓடியுள்ளார். சம்பவம் குறித்து தனது நண்பனுக்கு சிறுவன் தெரியப்படுத்தியதையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தீர்ப்பு
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டிக்கு பரிசோதனை செய்ததில் அவர் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் விசாரணையில் தனக்கு நேர்ந்த கொடூரத்தை அந்த மூதாட்டியால் விளக்கி கூற முடியவில்லை. மனநலன் பாதிக்கப்பட்டிருப்பதால் மூதாட்டியிடமிருந்து வாக்குமூலம் பெற முடியவில்லை. சம்பவம் குறித்த வழக்கு விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.

இழிவான செயல்
மூதாட்டியின் 30 வயது மதிக்கத்தக்க மகனின் நண்பனான சிறுவன் பதிவு செய்திருந்த 40 விநாடி கொண்ட அந்த வீடியோதான் வழக்கில் முக்கிய ஆதாரமாக இருந்துள்ளது. இதனையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உத்தரகாண்ட்டை சேர்ந்த 27 வயது இளைஞன் குற்றவாளி என நீதிபதி உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளார். தீர்ப்பில் இந்த இளைஞனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.35 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், "வயதானவர்களையும், மனநலன் பாதிக்கப்பட்டவர்களையும் மரியாதையுடன் நடத்தும் நமது பாரம்பரியத்தை குற்றவாளி மீறியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் செய்திருப்பது இழிவான செயல்" என்றும் நீதிபதி கூறியுள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications