தமிழகத்தில் மேலும் 1,052 பேருக்கு கொரோனா... 39-வது நாளாக 2,000க்கும் கீழ் பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 1,052 பேருக்குக் கரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 9 ஆயிரத்து 14 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 311 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று 17 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 12 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது வரை 9,391 (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் இன்று புதிதாக 1,052 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 39-வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 9 ஆயிரத்து 14 ஆக அதிகரித்துள்ளது. இன்று புதிதாக 65 ஆயிரத்து 357 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதனால், பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1 கோடியே 35 லட்சத்து 88 ஆயிரத்து 389 ஆக உள்ளது. இன்று புதிதாக 64 ஆயிரத்து 977 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால், பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 1 கோடியே 32 லட்சத்து 88 ஆயிரத்து 290 ஆக உயர்ந்துள்ளது.இன்று 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 12 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது வரை 9,391 (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் இன்று 311 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 22 ஆயிரத்து 888 ஆக உயர்ந்துள்ளது என அதில் கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications