தமிழகத்தில் 1.71 கோடி பேர் வாக்களிக்கவில்லை.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் ஒரு கோடியே 71 லட்சம் பேர் ஓட்டு போடவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 16ஆவது சட்டசபை பொதுத் தேர்தல் நேற்று முன் தினம் 234 தொகுதிகளுக்கும் நடைபெற்றது. தமிழகத்தில் 6,28,69,955 வாக்காளர்கள் உள்ளனர். அன்று நடந்த தேர்தலில் 72.78 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.
மாவட்ட அளவில் அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 83.92 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. சென்னையில் குறைந்த அளவாக 59.06 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

4.57 கோடி
தொகுதி அளவில் பார்த்தோமேயானால் அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33 சதவீதமும் , குறைந்த அளவாக வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீதமும் பதிவாகியிருந்தன. பதிவான மொத்த வாக்கு சதவீதத்தை பார்க்கும்போது 4.57 கோடி பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

கொரோனா
மீதமுள்ள 1.71 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை. கொரோனா பரவல் காரணமாக வாக்குப் பதிவு குறைந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் எல்லா பூத்துகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. வாக்குப் பதிவு சதவீதத்தில் கடைசி நிலையில் உள்ள சென்னை மாவட்டத்தில் கொரோனாவால் வேலையை இழந்து பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர்.

அச்சுறுத்தல்
அது போல் ஐடி நிறுவனங்களில் பணிபுரிவோரும் வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதி இருப்பதால் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். இதனாலும் வாக்கு சதவீதம் குறைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அது போல் கொரோனா அச்சுறுத்தலும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

இயலவில்லை
சென்னைக்கு வேலைத் தேடி வந்த பெரும்பாலானோருக்கு சென்னையில் வாக்கு இருந்த போதிலும் மேற்கண்ட காரணங்களினால் அவர்களால் வர இயலவில்லை. மேலும் தொலைதூர மாவட்டங்களில் இருப்போர் 6 முதல் 12 மணி நேரம் வரை பயணம் செய்ய வேண்டியுள்ளது. ஒரு நாள் விடுப்புக்காக போக வர 12 முதல் 24 மணி நேரம் பயணம் செய்ய இயலாத நிலையும் ஒரு காரணமாகும்.












Click it and Unblock the Notifications