குட் நியூஸ்.. தமிழ்நாட்டில் 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா.. உயிரிழப்பும் சரிகிறது!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,891பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஷாக்..! பக்ரீத்துக்கு முந்தைய நாள்.. திடீர் குண்டு வெடிப்பு - 8 பெண்கள், 7 குழந்தைகள் என 35 பேர் பலி
கொரோனாவுக்கு 26,158 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவையில் பாதிப்பு தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.
குறைந்த கொரோனா
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கையும், கடுமையான ஊரடங்குமே இந்த அளவுக்கு கொரோனாவை குறைத்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,891 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2,000-க்கும் கீழ் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.
மொத்த பாதிப்பு எவ்வளவு?
இதனால் மொத்த பாதிப்பு 25,41,168 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர். சேலத்தில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு 4 பேர் இறந்துள்ளனர். ஈரோட்டில் 3 பேர் இறந்துள்ளனர். சென்னையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவரை கொரோனாவுக்கு 33,809 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 2,423 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 24,81,201பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் தொடர்ந்து அதிகமாக இருக்கிறது.
சென்னையில் மீண்டும் அதிகரிப்பு
26,158 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,40,440 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 3,51,02,763 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 138 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கோவையில் பாதிப்பு தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. ஈரோட்டிலும் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
சேலம் நிலை என்ன?
கோவையில் மட்டும் 183 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 102 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 45 பேருக்கும், மதுரையில் 30 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 36 பேருக்கும், திருவள்ளூரில் 69 பேருக்கும், திருச்சியில் 71 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 97 பேருக்கும், விருதுநகரில் 17 பேருக்கும், ஈரோட்டில் 141 பேருக்கும், சேலத்தில் 119 பேருக்கும், நாமக்கல்லில் 59 பேருக்கும், தஞ்சாவூரில் 90 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.