களைகட்டிய காணும் பொங்கல்... சென்னையில் பாதுகாப்புக்காக 10,000 போலீஸார் குவிப்பு
சென்னை: வீட்டுப் பொங்கல், மாட்டுப்பொங்கலை தொடர்ந்து இன்று வழக்கமான உற்சாகத்துடன் காணும் பொங்கலை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
குடும்பத்துடன் சுற்றுலா தளங்களுக்கு சென்று அங்கு காணும் பொங்கலை மக்கள் கொண்டாடுவார்கள் என்பதால் பாதுகாப்பு பணிக்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையை பொறுத்தவரை மெரினா, வண்டலூர் உயிரியல் பூங்கா, மாமல்லபுரம் போன்ற இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் அங்கு சிறப்பு கேமராக்களை கொண்டு போலீஸ் கண்காணித்து வருகிறது.

களைகட்டியது
இன்று காணும் பொங்கல் என்பதால் வழக்கமான உற்சாகத்துடன் அதனை மக்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தளங்கள் காலை முதலே களை கட்டி காணப்படுகின்றன. குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்கு சென்று காணும் பொங்கலை கொண்டாட மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உயிரியல் பூங்கா
சென்னையை பொறுத்தவரை மெரினா கடற்கரைக்கும், வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருவதால் பத்தாயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், சிறப்பு சிசிடிவி கேமராக்களை கொண்டு கண்காணிப்பும் செய்கின்றனர்.

ட்ரோன்
சென்னை மெரினாவில் உழைப்பாளர் சிலை தொடங்கி கலங்கரை விளக்கு வரை உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு அங்கிருந்தபடி பைனாகுலர் உதவியுடன் போலீஸார் நோட்டமிட்டு வருகின்றனர். குழந்தைகளை அழைத்து வருவோர் மிக மிக கவனமுடன் இருக்க வேண்டும் என போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சுற்றுலா இடங்கள்
சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தளங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கொம்பு, தஞ்சை பெரிய கோவில், ஏற்காடு, கொடைக்கானல், ஊட்டி, குற்றாலம், என பல சுற்றுலா இடங்களுக்கும் காணும் பொங்கலை கொண்டாட மக்கள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications