விவசாயிகளுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு... அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு
சென்னை: நடப்பாண்டில் விவசாயிகளுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் நடந்து வருவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
சட்டமன்ற கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில், துறைவாரியான ஆய்வுக்கூட்டங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் கூட்டுறவுத் துறை ஆய்வு கூட்டம் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் சென்னையில் நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடப்பாண்டில் 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு வைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். தனியார் வங்கிகளுக்கு இணையாக, மாநில, மாவட்ட வங்கிகள் வங்கிகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளதாகவும், கூட்டுறவு வங்கிகளில் மக்கள் டெபாசிட் செய்வது 52 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளதாகவும் செல்லூர் ராஜூ பேசினார்.
முன்னதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆண்டு 8 ஆயிரம் கோடி ரூபாய் பயிர் கடன் வழங்க அறிவுறுத்தியதாகவும், ஆனால் 11 லட்சத்து 37 விவசாயிகளுக்கு 8 ஆயிரத்து 120 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக அரசு மீது யாரும் குற்றம் சொல்ல முடியாத அளவுக்கு வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தேர்தல் முடிவில் உண்மை உறங்கிவிட்டது, பொய் ஊர்வலம் வந்துவிட்டது. மக்கள்தான் ஏஜமானர்கள், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பாக எடுத்துக் கொள்வோம். மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையில் ஹிந்தி திணிப்பு உள்ளதாக எழுந்த புகார் குறித்து நாங்கள் பேசுவதை விட தமிழக முதல்வர் பேசினால்தான் சரியாக இருக்கும்.
அவர் பார்த்து கொள்வார். நாடாளுமன்ற தேரதலில் தோல்விக்கு அதிமுகவே காரணம் என ஆடிட்டர் குருமூர்த்தி கூறி வருகிறார். யார் யாரோ கூறும் கருத்துக்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது. அதிமுக அரசு மீது யாரும் குற்றம் சொல்ல முடியாத அளவிற்கு நாங்கள் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் தமிழக மக்களுக்கு நிறைவேற்றியிருக்கிறோம். தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு கடுமையான வறட்சி நிலவி வருகிறது என்றார்.
கூட்டுறவுத்துறை சத்தமில்லாமல் சாதித்துள்ளதாக கூறிய அமைச்சர் செல்லூர் ராஜூ, உள்ளாட்சி தேர்தலை பொருத்தவரை முதல்வர், துணை முதல்வர், கழக முன்னோடிகளின் வழிகாட்டுதல்படி செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் புதிய கல்விக்கொள்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போது தான் புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்குள் எதையும் கூறுவதற்கு இல்லை என்றும் கூறினார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications