Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

100% இடப்பங்கீடு நடைமுறைப்படுத்தும் நாளே சமூகநீதி நாள்.. துரும்பைகூட கிள்ளிபோடாத திமுக: பாமக ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இன்னும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படாத சமுதாயங்கள் ஏராளமான உள்ளன. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அவர்கள் அனைவருக்கும் மக்கள்தொகைக்கு இணையான இடப்பங்கீடு வழங்கி, தமிழ்நாட்டில் 100% இடப்பங்கீடு நடைமுறைப்படுத்தப்படும் நாள் தான் உண்மையான சமூகநீதி நாள் என்று தமிழகத்தின் மூத்த தலைவரும், பாமக நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வன்னியர் உள் ஒதுக்கீடு விவகாரத்தில், கடந்த 3 வருடங்களாகவே, திமுக தரப்பை, பாமக மேலிடம் அதிகமாகவே நம்பி வந்தது.. "அனைத்தையும் முதல்வர் ஸ்டாலின் பார்த்துக் கொள்வார், அதனால் போராட்டம் நடத்த வேண்டிய அவசியமிருக்காது" என்று பாமக அவசர செயற்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸும் ஒருமுறை தெரிவித்திருந்தார்.

100 reservation pmk dr ramadoss

லோக்சபா தேர்தல்: அதற்கேற்றவாறு, லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு முன்புவரை, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் சரி, அன்புமணியும் சரி, திமுகமீது எந்தவிதமான ஆதங்கத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தாமலேயே இருந்ததை மற்ற அரசியல் கட்சிகளும் உற்றுகவனிக்கவே செய்தன.
தன்னுடைய பிறந்தநாளின்போதுகூட, பாமக தலைவர் அன்புமணி, நேரடியாகவே முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசி, வன்னியர் இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

தெலுங்கானா: இதற்கு பிறகே, பாமகவின் எதிர்ப்பு வெளிப்பட துவங்கியது.. "பீகார், ஆந்திரா, கர்நாடகாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. தெலுங்கானாவிலும் இந்த நடவடிக்கை ஆரம்பமாகிவிட்டது. இனியும் மத்திய அரசு தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காலம் கடத்தாமல், தமிழக அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்" என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளிப்படுத்த துவங்கினார்.

"சமூகநீதி பற்றி சில கட்சிகள் பேசிவருகின்றன.. ஆனால், சமூகநிதியை விடாமல் பேசி வருவது பாமகதான்.. சமூக நீதி விவகாரத்தில் செய்த தவறுகளை திமுக அரசு திருத்திக்கொள்ள வேண்டும். தமிழக அரசு நினைத்திருந்தால் ஒரு மாதத்தில் இடஒதுக்கீடு வழங்கியிருக்க முடியும்... ஆனால் இதுவரை இடஒதுக்கீட்டை வழங்கவில்லை.

வன்னியர்கள்: வன்னியர்களால் வளர்ந்த திமுக, இப்போது வன்னியர்கள் மீது கொண்டிருக்கும் வஞ்சம் மற்றும் வன்மத்தின் காரணமாகவே உள் இட ஒதுக்கீடு வழங்க மறுக்கிறது.. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிவிடக் கூடாது என்பதற்காக தரவுகள் இல்லை என்று கூறி அரசு ஏமாற்றுகிறது என்று ராமதாஸ் குற்றஞ்சாட்டியபடியே உள்ளார்.

இந்நிலையில், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இன்றுடன் 950 நாட்கள் ஆகும் நிலையில், அதற்காக திமுக அரசு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்று டாக்டர் ராமதாஸ் மீண்டும் குற்றஞ்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது:

சமூகநீதி: "சென்னை மாகாணத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் 100% இடப்பங்கீடு வழங்குவதற்கான 1070 என்ற எண் கொண்ட சமூக அரசாணை 97 ஆண்டுகளுக்கு முன் சுப்பராயன் தலைமையிலான அரசில், கல்வித்துறை அமைச்சராக இருந்த முத்தையா முதலியார் அவர்களால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட நாள் இன்று. தமிழ்நாட்டில் முழுமையான சமூகநீதி நிலைநிறுத்தப்பட்ட நாளில் அதற்கு காரணமானவர்களை போற்றுவோம், நன்றி கூறுவோம்.

1921-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் தேதி பனகல் அரசர் தலைமையிலான அரசின் 100% இடப்பங்கீடு வழங்குவதற்கான அரசாணை எண் 613 நிறைவேற்றப்பட்டாலும் இடப்பங்கீடு உடனடியாக நடைமுறைக்கு வந்து விட வில்லை. கிட்டத்தட்ட 7 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு தான் சென்னை மாகாண மக்களுக்கு 100% இடப்பங்கீடு சாத்தியமானது.

சூழ்ச்சிகள்: இந்தியா விடுதலையடைந்து 1950-ஆம் ஆண்டு வரையிலும் சில, பல குறைகள் இருந்தாலும் 100% இடப்பங்கீடு நடைமுறையில் இருந்தது. சமூகநீதிக்கு எதிரான சதிகாரர்களின் சூழ்ச்சியால் தான் 100% இடப்பங்கீடு நீதிமன்றங்களின் துணையுடன் வீழ்த்தப்பட்டது.

சமூகநீதிக்கு சாவுமணி: 104 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு, 97 ஆண்டுகளுக்கு முன் இடப்பங்கீட்டை சாத்தியமாக்கிய இந்த சமூகநீதி மண்ணில் தான் இன்று சமூகநீதிக்கு சாவுமணி அடிக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. சுயநலத்தாலும், அக்கறையின்மையாலும் அந்த முயற்சிக்கு தமிழக அரசும் துணை போய்க்கொண்டிருக்கிறது. வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இன்றுடன் 950 நாட்கள் ஆகும் நிலையில், அதற்காக திமுக அரசு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை.

உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நாளில் தொடங்கி சில மாதங்களுக்கு முன்பு வரை 50-க்கும் மேற்பட்ட தடவை வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறி வந்த திமுக அரசு, திடீரென ஒரு நாள் நாங்களாக இட ஒதுக்கீடு வழங்க முடியாது; மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் வன்னியர் இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்று கூறி, உழைக்கும் பாட்டாளி மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டது. சமூகநீதி போர்வை போற்றி, சமூக அநீதிக்கு சாமரம் வீசும் ஆட்சியாளர்களுக்கு பாட்டாளி மக்கள் கண்டிப்பாக பாடம் புகட்டுவார்கள்.

100 சதவீத இடப்பங்கீடு: தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இன்னும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படாத சமுதாயங்கள் ஏராளமான உள்ளன. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அவர்கள் அனைவருக்கும் மக்கள்தொகைக்கு இணையான இடப்பங்கீடு வழங்கி, தமிழ்நாட்டில் 100% இடப்பங்கீடு நடைமுறைப்படுத்தப்படும் நாள் தான் உண்மையான சமூகநீதி நாள். அந்த இலக்கை அடைய பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக உழைக்கும்" என்று டாக்டர் ராமதாஸ் காட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இன்னும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படாத சமுதாயங்கள் ஏராளமான உள்ளன. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அவர்கள் அனைவருக்கும் மக்கள்தொகைக்கு இணையான இடப்பங்கீடு வழங்கி, தமிழ்நாட்டில் 100% இடப்பங்கீடு நடைமுறைப்படுத்தப்படும் நாள் தான் உண்மையான சமூகநீதி நாள். அந்த இலக்கை அடைய பாகம கடுமையாக உழைக்கும்" என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+