சொன்னபடியே ரிசல்ட்.. 10ம் வகுப்பு மாணவர்களே.. பேப்பர் திருத்தியாச்சு.. பள்ளிக்கல்வித்துறையின் வேகம்
சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில், ரிசல்ட் எப்போது என்பது குறித்த தகவலும் உறுதியாக உள்ளது.
கடந்த மார்ச் 1 முதல் மார்ச் 22 வரை 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று முடிந்தது.. இதுபோலவே, மார்ச் 4 முதல் மார்ச் 25 வரை 11ம் வகுப்பு மாணவர்களுக்கும், மார்ச் 26-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடந்து முடிந்தது..

பொதுத்தேர்வு: தேர்வு முடிந்ததுமே, ஏப்ரல் 12ம் தேதியே விடைத்தாள் திருத்தும் பணி ஆரம்பமானது.. இதற்காகவே, 88 சென்டர்களில் கிட்டத்தட்ட 50000 ஆசிரியர்கள் பணியில் நியமிக்கப்பட்டனர். கடந்த ஏப்ரல் 22ம் தேதி வரை திருத்தும் பணிகள் நடந்து முடியும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது..
இதில், 10ம் வகுப்பு விடைத்தாள்களை திருத்துவதற்காக மட்டும், மாநிலம் முழுதும், 103 மையங்களில் பணிகள் நடந்தன.. இந்த விடைத்தாள் திருத்தும் பணிகள் நேற்றுடன் முடிவடைந்தன. மதிப்பெண்களை சரிபார்க்கும் பணிகளும் துவங்கியுள்ளன.. இதற்கு பிறகு, மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகள் மட்டும்தான், மிச்சமுள்ளதாக தெரிகிறது..
மதிப்பெண் சரிபார்ப்பு: இதைத்தொடர்ந்து, மதிப்பெண்களின் பட்டியல் தயாரிப்பு, மதிப்பெண் சரிபார்ப்பு, மாணவர்களின் விபரங்களுடன் மதிப்பெண்களை கம்ப்யூட்டரில் அப்லோடு செய்யும் பணிகள் நடந்து கொண்டிருப்பதாக தெரிகிறது..
அரசு தேர்வு துறையின் அலுவல் பணி சார்ந்த ஆன்லைன் தளத்தில், மதிப்பெண்கள் பதிவேற்றப்பட்டும் வருகின்றன.. எனவே, ஏற்கனவே திட்டமிட்டப்படி மே 10-ம் தேதி தேர்வு முடிவை வெளியிட அரசு தேர்வுத்துறை தயாராகி வருகிறது.
எப்படி அறிந்து கொள்வது: அந்தவகையில், மாநில அரசின் அதிகாரப்பூர்வமான இணையதளமான www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய வெப்சைட்களில் பார்த்து அறிந்து கொள்ளலாம். அதேபோல எஸ்எம்எஸ் மூலமாகவும் தேர்தல் முடிவுகளை அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.. இதைத்தவிர, பள்ளி மாணவர்கள் அவர்கள் படித்த பள்ளிகளிலும், கலெக்டர் அலுவலக வளாகத்திலும், அனைத்து நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை கட்டணமின்றி தெரிந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிளஸ் 2 தேர்வு ஏற்கனவே முடிந்து, விடைத்தாள் திருத்தமும் நிறைவு பெற்று விட்ட நிலையில், வரும், 6ம் தேதி அரசு தேர்வு துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன... 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தமும் நேற்றுடன் முடிந்துள்ளதால், பிளஸ் 1க்கு விடைத்தாள் திருத்தம் தற்போது நடந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications