ஆஹா.. அர்ஜுன் சம்பத் வேற ஆரம்பிச்சிட்டாரே.. "பூப்பூவாய் பூப்போம் வா".. இன்று காதலர் தின கொண்டாட்டம்
இன்று பிப்ரவரி 14 காதலர் தினம் கொண்டாடுவோரை கைது செய்ய டிஜிபி அலுவலகத்தில் மனுதரப்பட்டுள்ளது
சென்னை: உலகம் முழுவதும் வேலண்டைன்ஸ் டே எனப்படும் காதலர் தினம் இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் காதலர் தின கொண்டாட்டம் களை கட்டி வருகிறது என்றாலும் சில எதிர்ப்புகளும் வெடித்து வருகின்றன.
''காதல்'' இந்த ஒற்றை சொல் உருவாக்கிய காவியங்களும், காப்பியங்களும் உலகில் ஏராளம்... காதலை சொல்லாத இலக்கியம் இல்லை.. காதலை சொல்லாத மொழிகள் இல்லை.. காதலை உணராத உயிர்கள் இல்லை.
பூக்கள் மட்டுமல்லாமல், போர்க்களங்களையும் திரண்டு கொண்டதுதான் காதல்.. காதலுக்கு வயது கிடையாது.. மொழி கிடையாது.. இனமும், மதமும் கிடையாது.. தூரங்கள் துளியும் கிடையாது..

மனிதகுலம்
ஒருவரையொருவர் நேரில் பார்க்காமல் உணர்வுகளால் காதலித்தது முதல் இன்றைய 2K கிட்ஸ்களின் ஆன்லைன் காதல் வரை, படர்ந்து விரிந்து, காலம் காலமாக நம்முடனேயே பயணித்து வருகிறது காதல்.. ஜீவராசிகள் அனைத்தையும் ஒரு புள்ளியில் இணைத்து காட்டுவது, காதல் என்ற உணர்வுபூர்வமான விஷயம் மட்டுமே.. ஒவ்வொரு நிமிடமும் காதலில் மனிதகுலம் மூழ்கி திளைத்தாலும், இந்த தினத்தை கொண்டாடவே, காதலர் தினத்தையும் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.. ஆண்டுதோறும் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம் (வாலன்டைன்ஸ் டே) கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு காரணங்கள் கதைகளாக கூறப்பட்டும் வருகிறது.

கலாச்சாரம்
அன்பை பரிமாற்றிக் கொள்வதும், தன் மேல் இருக்கின்ற ஒரு நம்பிக்கை, பாசம் அனைத்தும் வெளிப்படுத்துவதும் என இன்றைய தினத்தை மகிழ்ந்து கொண்டாடுகிறது இந்த உலகம்.. மேற்கத்திய கலாச்சாரமாக இதை கருதப்பட்டாலும், காதல் என்ற உணர்வு பொதுப்படையானதால், நம் இந்தியாவிலும் இதற்கான வரவேற்புகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது.. பீச், பார்க்குகள், ஹோட்டல்கள் என பல இடங்களுக்கு சென்று, காதலர்கள் தங்கள் மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக இந்த நாளை பயன்படுத்தி கொண்டு வருகிறார்கள்.

ரோஜாக்கூட்டம்
காதலர் தினத்தில் காதலர்கள் ஒன்றாக சேர்ந்து மகிழ்ச்சியை கொண்டாடுவதற்காக வெளியே சென்று வருவது தான் காதலர்களின் சிறப்பு ஆகும்.. அதன்படி, உலகமே ரோஜாப்பூக்களுடன் இன்றைய தினத்தை கொண்டாடி வருகிறது.. வழக்கமாக இந்த நாளுக்கு முதல் நாளே, ரோஜாக்களுக்கும், கொய்மலர்களுக்கும் பெரும் தேவை இருக்கும்... அதனால் விலையும் உச்சமாகி விடும். அந்த வகையில் நம் தமிழ்நாட்டின் பூ மார்க்கெட்டுகளில் ரோஜாப்பூக்களின் விலை நேற்று பல மடங்கு உயர்ந்திருந்தது... வழக்கமாக 10 நம்பர் கொண்ட ஒரு கட்டு 150 ரூபாய்க்கு விற்பது நேற்று 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சிகப்பு மற்றும் இளம் சிகப்பு நிறங்களில் உள்ள சாதாரண ரோஜா ஒன்று ஒரு ரூபாய்க்கும், கிலோ 500 ரூபாய்க்கும் விற்றது.

இந்து முன்னணி
வழக்கமாக, இந்த காதலர் தினத்தை கொண்டாட இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.. காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாய் மற்றும் கழுதைக்குத் திருமணம் செய்து வைத்தும் வருகின்றனர்.. காதலர் தினத்திற்கு பதிலாக பசுமாட்டை அரவணைக்கும் தினமாக கொண்டாட வேண்டும் என விலங்குகள் நலவாரியம் கோரிக்கை விடுத்தது... ஆனால், அந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அது திரும்ப பெறப்பட்டுவிட்டது. ஆனாலும், இந்து முன்னணி பசுவை கட்டிப்பிடிப்பதாக சொல்லி உள்ளது.. காதலர் தினத்தன்று இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் பசுமாட்டை அரவணைக்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் அறிவித்திருக்கிறார்.

கழுதைக்கும் கழுதைக்கும்
இந்நிலையில், தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு சார்பில் டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் , காதலர் தினத்தை முன்னிட்டு சமூக விரோதிகள் சிலர் காதலர்களை, தாக்குவது, காதலுக்கு எதிராக சமூகவிரோத செயலில் ஈடுபடுவது உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடவுள்ளனர். காதலர்களுக்கு இடையூறு செய்பவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.. எனினும், ஆயிரம் எதிர்ப்புகள், கட்டுப்பாடுகள், கண்டனங்கள், கைதுகள் வந்தாலும், அனைத்தையும் நொறுக்கி தள்ளிவிட்டு இன்றைய தினம், தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகிறார்கள் காதலர்கள்..!!
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications