தமிழ்நாட்டில் இன்று 1851 பேருக்கு கொரோனா.. 28 பேர் பலி.. ஆக்டிவ் கேஸ்கள் 20,370 ஆக குறைந்தது
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1851 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து கட்டுப்பாட்டில் உள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் 12 ஆயிரத்திற்கும் அதிகமாக கேஸ்கள் பதிவாகி வருகிறது. அங்கு இன்னும் கொரோனா கேஸ்கள் கட்டுப்படுத்தப்படவில்லை.
கேரளாவில் ஆக்டிவ் கேஸ்கள் மட்டும் 1,72,250 ஆக உள்ளது. இந்தியாவில் மொத்தம் பதிவாகும் கேஸ்களில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக கேரளாவில்தான் பதிவாகி வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக 2 ஆயிரத்திற்கும் குறைவாகவே கேஸ்கள் பதிவாகி வருகிறது.

எத்தனை
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1851 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 28 பேர் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 34547 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

சென்னை
சென்னையில் இன்று 205 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. 2080 பேர் சென்னையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். கோவையில் 217 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 2406 பேர் கோவையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். ஈரோட்டில் 170 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 1833 பேர் ஈரோட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.

குணம்
தமிழ்நாட்டில் இன்று 1911 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 25,35,715 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழ்நாட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 20,370 ஆக உள்ளது.

மொத்தம்
தமிழ்நாட்டில் மொத்தமாக இதுவரை 25,90,632 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1,54,631 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் இன்று 1,53,994 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் இதுவரை 3,90,74,589பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications