5 ஸ்டார் ஹோட்டலில் பாலியல் தொழில்! ஒரு நைட்டுக்கு ரூ 25 ஆயிரம் வசூல்! இரு நடிகைகளை கைது செய்த போலீஸ்
சென்னை: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக பிரபல ஹீரோயின்கள் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள வகாட் மாவட்டத்தில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் ஹீரோயின்களை வைத்து விபச்சாரம் தொழில் செய்யப்படுவதாக பிம்ரி சிஞ்ச்வாட் கிரைம் பிராஞ்ச் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு சோதனை செய்ய சென்றிருந்தனர்.

அப்போது மாடல்களும் நடிகைகளும் அங்கு பாலியல் தொழிலில் இருந்தவர்கள். அவர்களுடன் இடைத்தரகரையும் போலீஸார் கைது செய்தனர். பெண்களுக்கு பணத்தாசை காட்டி அவர்களை இந்த தொழிலில் சில இடைத்தரகர்கள் தள்ளிவிடுவது தெரியவந்தது.
ஒரு அழகியுடன் இரவு முழுவதும் தங்க ரூ 25 ஆயிரமும் பகலில் தங்க ரூ 15 ஆயிரமும் கட்டணமாக வாங்கப்பட்டது. அந்த நடிகைகள் போஜ்புரி மொழியை சேர்ந்தவர்கள். இது போல் பாலியல் தொழில் நடப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் அவ்வாறு குற்றச்செயல்களை கண்டறிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.
இந்த பாலியல் தொழில் நடத்தும் ஏஜென்ட்களை குற்றப்பிரிவு போலீஸார் பொறி வைத்து பிடித்தனர். அவர்கள் ஒரு டம்மி வாடிக்கையாளரை ஏற்பாடு செய்து ஆன்லைன் மூலம் ஏஜென்ட்டை தொடர்புகொள்ள வைத்தனர். ஏஜென்டும் அந்த வாடிக்கையாளரிடம் குறிப்பிட்ட 5 நட்சத்திர ஹோட்டலை தொடர்பு கொண்டு அறை புக் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து அந்த போலி வாடிக்கையாளர் அந்த ஹோட்டலில் அறை புக் செய்துவிட்டு காத்திருந்தார். அப்போது அங்கு இரு பெண்களும் ஏஜென்ட்டும் வந்திருந்தனர். ரேட்டை பேசினர். இதை வைத்து ஒவ்வொரு தகவலாக போலி வாடிக்கையாளர் அந்த போலீஸுக்கு தகவல் கொடுத்துக் கொண்டே இருந்தார். அதன்படி போலீஸார் 5 நட்சத்திர ஹோட்டலுக்கு வந்திருந்தனர்.

அங்கு நடத்தப்பட்ட சோதனையில் இந்த பாலியல் தொழிலை நடத்துவதே போஸ்புரி நடிகையும் மாடலும்தான் என தெரியவந்தது. அங்கிருந்த ஒரு ஏஜென்ட்டையும் இரு பெண்களையும் பாலியல் தொழில் செய்ததாக போலீஸார் கைது செய்தனர். அந்த நடிகைக்கு 24 வயது இருக்கும். நடிகையும் மாடலும் இந்த பகுதியை தவிர வேறு சில இடங்களிலும் பாலியல் தொழில் நடத்தி வந்ததாக தெரியவந்தது.












Click it and Unblock the Notifications