"நூல்" போட்டதால் நூலுக்கு விருதா".. மாலன் பற்றி தடதடத்த "தடா".. திரண்டு வந்த பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2021ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் பரிசுக்கு, மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான மாலன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்... சிறந்த மொழிப்பெயர்ப்பாளருக்கான விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

1955-ம் ஆண்டிலிருந்து சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது... இலக்கிய உலகில் இந்த விருதுக்கு தனி மரியாதையே உண்டு.

பல மொழிகளில் படைக்கப்பட்டுள்ள படைப்புகளில், சிறந்த நூல்களை தேர்ந்தெடுத்து இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

 சாகித்ய அகாடமி

சாகித்ய அகாடமி

அந்த வகையில், சாகித்ய அகாடமி விருதுடன், சாகித்ய அகாடமி சார்பில் வருடந்தோறும், தனித்துவமான இளம் எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார் விருதும் வழங்கப்படுகிறது... இதைதவிர, மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்கான விருதும் வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2021-ம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கான விருதுகள் விவரம் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டது.

 மாலன் - விருது

மாலன் - விருது

பல்வேறு இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட 22 மொழிகளில் வெளியான மொழிபெயர்ப்பு நூல்களுக்கு விருதுகள் கிடைத்துள்ளன... இதில், சிறந்த மொழிபெயர்ப்பிற்கான விருது தமிழின் மூத்த ஊடகவியலாளரும், எழுத்தாளருமான மாலனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. சைரஸ் மிஸ்ட்ரி எழுதிய ' Chronicle of a Corpse Bearer' என்ற, ஆங்கில நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பான 'ஒரு பிணந்தூக்கியின் வரலாற்று குறிப்புகள்' நூலுக்காகத்தான் மாலனுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது..

 பிணம் தூக்கும் பணி

பிணம் தூக்கும் பணி

அதாவது, பார்சி சமூகத்தில் பிணம் தூக்கும் பணிகளை செய்யும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் பற்றி 'Chronicle of a Corpse Bearer' என்ற ஆங்கில நாவல் உருவாக்கப்பட்டது.. இதை எழுதியவர் பிரபல இந்திய நாடக ஆசிரியர் சைரஸ் மிஸ்திரி ஆவார்.. இந்த விருது அப்போதே பல விருதுகளை பெற்றது.. இதிலும், கடந்த 2015-ம் ஆண்டின் சிறந்த ஆங்கில இலக்கிய நூலுக்கான சாகித்ய அகாடமி பிரதான விருதையும் பெற்றுள்ளது.

 சோஷியல் மீடியா

சோஷியல் மீடியா

இதைதான், தற்போது மாலன் மொழிபெயர்த்துள்ளார்.. விருது பெற போகும் மாலனுக்கு, பலர் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.. எனினும், இந்த விருது வழங்கப்பட்டது குறித்து சோஷியல் மீடியாவில் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் நெட்டிசன்கள் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.. இதற்கு முக்கிய காரணம், மாலன் சாகித்ய அகாடமியின் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினராக 2018-ம் ஆண்டு முதல் இப்போது வரை இருந்து வருகிறார்.. இவருக்கு விருது வழங்கியதே, சர்ச்சைக்குரிய முடிவு என்று பலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 பூணூல் - நூல்

பூணூல் - நூல்

இதனிடையே, இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் தடா ஜெ. அப்துல் ரஹிம் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அதில், "எழுத்தாளர் மாலனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.. எதற்காக இந்த விருது? நூல் போட்டதால் நூலுக்கு விருதா ?" என்று கேள்விகளை எழுப்பி உள்ளார்.. இதற்கு பலரும் திரண்டு வந்து பதிலடி தந்து வருகிறார்கள்.. இப்படியெல்லாம் பேசி, சாகித்ய அகாடமி விருதுகளை கேவலப்படுத்தக்கூடாது என்றும், இதுக்கும் பூணூலுக்கும் என்ன சம்பந்தம் என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதையடுத்து, மாலனுக்கு வழங்கப்பட உள்ளதாக கூறப்படும் விருது பற்றின சர்ச்சை ஓயவே இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+