ஆயுதப் படை காவலர் தற்கொலை.. கடனால் சிக்கிய குடும்பம்.. இளம் காவலர்களின் மனிதாபிமானம்.. நெகிழ்ச்சி!
சென்னை: சென்னை ஆயுதப்படையில் பணியாற்றி தற்கொலை செய்து கொண்ட காவலர் அருணின் குடும்பத்திற்கு அவருடன் பயிற்சி முடித்த காவலர்கள் எல்லாம் சேர்ந்து ரூ 7 லட்சத்தை நிதியுதவியாக அளித்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆயுதபடையில் பணியாற்றி கொண்டிருந்த ஆயுதப்படை காவலர் அருண் கடந்த ஜூலை10 ஆம் தேதி சென்னை ஆயுதப் படையில் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். காவலர் அருண் விருதுநகர் மாவட்டத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து கடும் முயற்சியால் காவலர் ஆனவர்.

அவரது உயர்வு அவரது குடும்பத்தில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிகரமாக இருந்து வந்தது. கண், காது இயங்காத அவரது தாய் தந்தைக்கு காவலரின் பணி மிக பெரும் உதவியாக இருந்து வந்தது. இந்நிலையில் அவரது மரணம் காவலர் அருணின் குடும்பத்திற்கு பேரிடியாக அமைந்தது. கடன் சுமையால் அருணின் குடும்பத்தினர் மிகவும் கஷ்டப்பட்டு வந்தனர்.

இதனை அறிந்த அவருடன் தேர்வான காவலர்களான 2022 பேட்ச் காவலர்கள் அருணின் குடும்பம் நமது குடும்பம் . அந்த குடும்பத்தை துன்பத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என கருதினர். வாட்ஸ் ஆப் குழு மூலமாக தமிழ்நாட்டில் உள்ள அவரது பேட்ச் காவலர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒவ்வொரு காவலரும் தங்களால் முடிந்த பணத்தை அனுப்ப ஆரம்பித்தனர்.

இதுவே விஸ்வரூபம் எடுத்து ரூ. 7,13,452 (ஏழு இலட்சத்து பதிமூன்றாயிரத்து நானூற்று ஐம்பத்தி இரண்டு ரூபாய்) அருணின் குடும்பத்திற்கு அருண் பேட்ச் காவலர்கள் மூலமாக கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் பயிற்சி முடித்தே 7 மாதங்கள்தான் ஆகிறது. தமிழக காவல்துறை வரலாற்றில் இதுவரை இவ்வளவு குறைந்த பணிகாலத்தில் இவ்வளவு பெரிய தொகை உடன் பணியாற்றும் காவலர்களுக்கு கொடுக்கபட்டதில்லை என காவலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு முன்பு விபத்துக்குள்ளான மூன்று 2022 பேட்ச் காவலர்களுக்கும் இவர்கள் உதவியுள்ளனர் என்பது அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. இவ்விஷயம் அறிந்த சமூகநல ஆர்வலர்கள் மற்றும் சீனீயர் காவலர்கள் 2022 பேட்ச் காவலர்களை பாரட்டிய வண்ணம் உள்ளனர். அன்பு அஹிம்சையின் வம்சம், நட்பு நம்பிக்கையின் வம்சம் என்பதை நிரூபித்து காட்டிய 2022 பேட்ச் காவலர்களுக்கு எங்கள் சல்யூட் என தெரிவிக்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள். இந்த மனசுதான் சார் கடவுள்... இதுதான் நினைவுக்கு வருகிறது.
-
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்!












Click it and Unblock the Notifications