"வீராகூட தான் தப்பு பண்ணேன்.. அவரையே லவ் பண்ணேன்.. எனக்கு நியாயம் வேணும்.. பெண் கண்ணீர்

போலீஸ்காரர் மிரட்டுகிறார் என்று இளம்பெண் புகார் தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "நான் உன்கூட தான் ஊர் சுத்தினேன்.. உன்கூட தான் தப்பு பண்ணேன்.. என்னை தொட்டவனையே கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கிறேன்.. அதுதான் எனக்கு மரியாதை.. இன்னொருத்தன்கூட தப்பு பண்ணால்தான் அது எனக்கு அசிங்கம்.. நீ என்கிட்ட பேசினது எல்லாமே பொய்யா" என்று கான்ஸ்டபிள் வீரமணியிடம் இளம்பெண் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது.

சென்னையை சேர்ந்தவர் சரஸ்வதி.. 24 வயதாகிறது.. சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கான்ஸ்டபிள் வீரமணி மீது ஒரு புகார் தந்திருந்தார்.

24 year old young woman case against chennai police constable

அதில், போலீஸ் வேலையில் சேருவதற்காக கிரவுண்டுக்கு பிராக்டிஸ் பண்ண போனேன்.. அப்போது வீரமணி என்பவர் பழக்கம் ஆனார்.. அது காதலாக மலர்ந்தது.. பிறகு அவருக்கு மட்டும் வேலை கிடைத்துவிட்டது. நான் போலீசுக்கு தேர்வாகவில்லை.

ஒருமுறை என்னை வீட்டுக்கு வரவழைத்து, கல்யாணம் செய்து கொள்வதாக வாக்களித்தார்.. பிறக்க போகும் குழந்தை மீதும் சத்தியம் செய்தார். இதனால் இருவருமே அன்று சந்தோஷமாக இருந்தோம். இதற்கு பிறகு என்னிடம் அவர் பேசுவதை குறைத்து கொண்டார்.

காரணம் கேட்டதற்கு "என் மகன் சப்-இன்ஸ்பெக்டருக்கு படிக்க போறான்.. அதனால் வேறு பெண்ணை கல்யாணம் செய்ய போகிறோம்" என்று வீரமணியின் தந்தை என்னை மிரட்டினார்.. தன்னையே கல்யாணம் செய்வதாக சொல்லியதை நம்பி அவருடன் கணவன், மனைவியாக வாழ்ந்துவிட்டேன்.. மோசடி செய்த கான்ஸ்டபிள் வீரமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் தெரிவித்திருந்தார்.

இது சம்பந்தமாக அந்த பெண் தெரிவித்தபோது, "நான் வீராவை ரொம்பவும் நம்பினேன்.. என்னை கல்யாணம் செய்துக்கிறதா சொன்னார்.. இப்போ ஏமாத்தறார்.. என் குடும்பத்துக்கு எல்லாமே நான்தான்.. ஆனா, இன்னைக்கு என் அம்மா, அப்பாவே என்னை வெறுக்கிற அளவுக்கு ஆளாயிட்டேன்.. ஒரு அனாதை மாதிரி இன்னைக்கு இருக்கேன்.. நான் எங்கே போவேன். என்னென்ன காரணங்களையோ சொல்லி இப்போ தட்டிக்கழிக்க பார்க்கிறார்.. என்னை அவர் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்"என்கிறாராம் கண்ணீர் மல்க!

இதனிடையே சரஸ்வதி, வீரமணியுடன் பேசும் ஆதாரத்தையும் போலீசில் ஒப்படைத்துள்ளாராம். அதில், "மத்தவங்களோடவா நான் ஊர் சுத்தினேன்.. மத்தவங்ககூடவா தப்பு பண்ணினேன்.. உன்கூடதானே ஊர் சுத்தினேன்.. உன்கூடதானே தப்பு பண்ணேன்.. என்னை தொட்டவனையே கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கிறேன்.. அதுதான் எனக்கு மரியாதை.. இன்னொருத்தன்கூட தப்பு பண்ணால்தான் அது எனக்கு அசிங்கம்.. என்கூட நீ பழகினது, பேசினது எல்லாமே பொய்யா.. உன்னை எவ்ளோ நம்பினேன்" என்று அழுதபடியே பேச.. வீரமணி அதற்கு சமாதானம் செய்வது போல பேசுகிறார்.

இந்த விவகாரத்தில் உண்மை தன்மை என்ன என்பது வெளிப்படையாக தெரியவில்லை.. என்றாலும் போலீசார்தான் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+