சென்னைக்கு ஹேப்பி நியூஸ்.. 25,000 ரெம்டெசிவிர் மருந்து வந்து சேர்ந்தது.. கொரோனா சிகிச்சைக்கு!
சென்னை: கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க 25 ஆயிரம் எண்ணிக்கையிலான ரெம்டெசிவிர் மருந்து சென்னை வந்தடைந்தது.. இதனால், தொற்று எண்ணிக்கை மேலும் கட்டுப்படுத்தப்படும் என்று நம்பிக்கையும் தமிழக மக்களுக்கு பிறந்துள்ளது.
தளர்வுகளை அறிவித்தாலும், தொற்று எண்ணிக்கை இன்னமும் நமக்கு குறையவில்லை.. நாளுக்கு நாள் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை பெருகியே வருகிறது.
எனினும், தமிழக அரசு தன் முயற்சியை சிறிதும் கைவிடவில்லை.. அதனால்தான் பலரும் குணமடைந்து வருகின்றனர்... இந்தியாவிலேயே அதிகமாக குணமடைபவர்களின் விகிதம் தமிழ்நாட்டில்தான்.

நடவடிக்கை
தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது... அதன் ஒரு பகுதியாகத்தான், அரசு ஆஸ்பத்திரிகளில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் என்ற மருந்துகளை கொண்டு சிகிச்சை தரப்படுகிறது.

தொற்று
தொற்றை குணப்படுத்த மருந்து மற்றும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத காரணத்தால், நோயின் தாக்கத்தை பொறுத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த ‘ரெம்டெசிவிர்' என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்து சென்னை ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரி, ஓமந்தூரார் ஆஸ்பத்திரிகளில் உள்ள நோயாளிகளுக்கு அவர்களின் அனுமதி பெற்று வழங்கப்பட்டது. அதற்கேற்றபடி தொற்றை கட்டுப்படுத்துவதில் அவை பயனளிக்கவும் செய்கின்றன.

சென்னை
இந்த மருந்து விலை உயர்ந்தது... இதனை தமிழ்நாடு மருத்துவ பணிகள் சேவை கழகம் கொள்முதல் செய்து வருகிறது. இந்த மாதம் 2 லட்சம் எண்ணிக்கை ரெம்டெசிவிர் மருந்துக்கு ஆர்டர் செய்யப்பட்டிருந்தது.. அதன்படி, முதல்கட்டமாக 25 ஆயிரம் மருந்துகள் சென்னைக்கு வந்து சேர்ந்தன.. இனி இந்த மருந்துகளை ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் பிரித்தனுப்பும் பணிகள் நடந்து வருகிறது.

ரெம்டெசிவிர்
பல்வேறு மாநிலங்களில் செயல்படும் நிறுவனங்களிடம் 2 லட்சம் எண்ணிக்கையில் ரெம்டெசிவிர் மருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இப்போது, 25 ஆயிரம் மருந்துகள் வந்துள்ளதால், மீதமுள்ள ஒரு லட்சத்து 75 ஆயிரம் மருந்துகள் அடுத்த மாதத்துக்குள் வந்துவிடும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இதனால் தொற்று பாதிப்பு வீதம் மேலும் குறையும் என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications