இதுவரை இல்லாத அளவு.. சென்னையில் ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா.. 4 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை
சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில், இதுவரை இல்லாத அளவுக்கு 266 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தை, கடலூர் பிடித்துள்ளது. மூன்றாவது இடம் விழுப்புரம் மாவட்டத்திற்கு. இதற்கு முக்கிய காரணம், கோயம்பேடுதான் என்கிறார்கள் அதிகாரிகள்.
Recommended Video
இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா ஏன்.. சுகாதாரத் துறை விளக்கம்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு, கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சென்னையில்தான் மிக அதிக பாதிப்பு பதிவாகியுள்ளது. மாவட்ட வாரியான விவரத்தை பாருங்கள்:
- சென்னை: 266
- கடலூரில்: 122
- விழுப்புரம்: 49
- பெரம்பலூர்: 25
- திருவண்ணாமலை: 11
- திண்டுக்கல்: 10
- தென்காசி, திருவள்ளூர்: 9
- அரியலூரர்: 6
- செங்கல்பட்டு, திருச்சி: 4
- ராணிப்பேட்டை: 3
- திருவாரூர் & விருதுநகர்: 2
- கரூர், மதுரை, ராமநாடு, தஞ்சை, திருப்பத்தூர்: 1
தமிழகத்தில் கொரோனா இல்லாத 4 மாவட்டங்களும் உள்ளது. கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, தூத்துக்குடி ஆகிய மாவட்டகளில் கொரோனா பாதிப்புடையோர் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
266 people have been affected by coronavirus in a single day in Chennai today. Cuddalore occupies the second spot. Third place to Villupuram district. Officials say that the main reason for this is Koyambedu.
Story first published: Monday, May 4, 2020, 19:01 [IST]