அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்ளுக்கு எதிராக போட்டி.. 3 பேரை நீக்கி ஓபிஎஸ், இபிஎஸ் உத்தரவு
சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக வேட்புமனுதாக்கல் செய்தமதுரை மாநகர் மாவட்டத்தைச் ச்ரந்த கிரம்மர் சுரேஷ்(கழக எம்ஜிஆர் அணி இணைச் செயலாளர்) உள்பட 3 நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:
கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில். நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ள காரணத்தாலும்

- மதுரை மாநகர் மாவட்டத்தைச் ச்ரந்த கிரம்மர் சுரேஷ்(கழக எம்ஜிஆர் அணி இணைச் செயலாளர்)
- புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த சி. அழகுசுப்பையா(பொன்னமராவதி ஒன்றியக் கழக முன்னாள் செயலாளர்)
- விருதுநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கோகுலம் எம். தங்கராஜ்(விருதுநகர் மேற்க மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர்)
ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம்" இவ்வாறு கூறியுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications