2-வது மனைவி மீது சந்தேகம்.. துப்பாக்கியால் சுட்டு மிரட்டிய திமுக மாஜி எம்எல்ஏ.. 3 வருடம் ஜெயில்!
திருவாரூர் மாஜி எம்எல்ஏவுக்கு 3 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
சென்னை: வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிஸ்கட் தந்துவிட்டு, வீட்டுக்கு வந்த மனைவி ஹேமாவை சந்தேகப்பட்டு..துப்பாக்கியால் சுட்டு மிரட்டிய திமுக மாஜி எம்எல்ஏவுக்கு 3 வருட ஜெயில் தண்டனை கிடைத்துள்ளது.
கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை 2 முறை திருவாரூர் தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்தவர் அசோகன். 2006-ம் ஆண்டு இவர், திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார். முன்னாள் அதிமுகவின் பேச்சாளரும்கூட!

இவர், தன்னுடைய 2வது மனைவி ஹேமாவுடன் சென்னை பட்டினம்பாக்கத்தில் 2015ஆம் ஆண்டு வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். 2015-ம் ஆண்டு சென்னையில் வெள்ளம் பாதிக்கப்பட்ட சமயத்தில், அதாவது டிசம்பர் 6-ந்தேதி ஹேமா, கணவரின் உதவியாளரை அழைத்துக் கொண்டு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, பால், பிஸ்கட் வழங்க சென்றார்.
திரும்பவும் வீட்டுக்கு வர இரவு 11 மணி ஆகிவிட்டது. அதனால் அசோகன், ஹேமா மீது சந்தேகப்பட்டு தகராறு செய்தார். ஹேமாவையும் அவரது தாயாரையும் வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு துப்பாக்கியால் சுட்டு மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன ஹேமா தன் அம்மாவை கூப்பிட்டுக் கொண்டு வெளியே வந்துவிட்டார்.
பின்னர் இதுகுறித்து பட்டினப்பாக்கம் போலீசில் ஹேமா, புகார் செய்தார். தன்னை இரண்டு முறை சுட்டு கொலை செய்ய பார்த்தார் என்று ஹேமா சொல்லவும், அசோகன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தது.
அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், ஹேமாவை துப்பாக்கியால் சுட்டதை உறுதி செய்ததையடுத்து, அசோகனை கைது செய்தனர். இதையடுத்து, அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாலும், இந்த வழக்கு விசாரணை சென்னை கலெக்டர் ஆபீசில் செயல்பட்டு வரும் எம்பி., எம்எல்ஏக்களுக்கான சிறப்பு கோர்ட்டில் நீதிபதி சாந்தி முன்னிலையில் நடந்து வந்தது.
இந்நிலையில், இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கில் தீர்ப்பு சொல்லப்பட்டுள்ளது. அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட அசோகனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 11 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அதேசமயம் வழக்கில் அசோகனின் கோரிக்கையை ஏற்று ஒரு மாதத்திற்கு தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications