Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"30 சதவிகிதம்.." தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மீண்டும் கிளம்பிய அதே பிரச்சினை.. பெரிய சிக்கல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நமது ஊர்களில் இருக்கும் அரசு மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு குறித்து பலரும் புகார் அளித்து வரும் நிலையில், இது தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்தியாவிலேயே மருத்துவ கட்டமைப்பு சிறப்பாக உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. உலகின் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இங்கு மருத்துவர்கள் உள்ளனர் என்பது சிறப்பு வாய்ந்த விஷயமாகும்.

அதேபோல இங்கு மாநிலத்தில் இருக்கும் கிட்டதட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மருத்துவக் கல்லூரி இருக்கிறது. அந்தளவுக்கு விரிவான ஒரு மருத்துவ கட்டமைப்பைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது.

மருத்துவமனைகள்

மருத்துவமனைகள்

அதேநேரம் இங்கு பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் நிலைமை அவ்வளவு சிறப்பானதாக இல்லை. இதனால் நோயாளிகள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மோசமாக உள்ளதாகத் தொடர்ச்சியாகப் புகார்கள் உள்ளன. இதனால் நோயாளிகள் மட்டுமின்றி அவர்களைப் பார்க்க வரும் பார்வையாளர்களும் கூட சில அசவுகரியத்தை எதிர்கொள்ள நேரிடுகிறது.

அமைச்சர் மா.சு

அமைச்சர் மா.சு

சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்திருந்தார். அப்போது 3ஆம் மாடியில் அமைந்துள்ள கை அறுவை சிகிச்சை சிறப்புப் பிரிவைப் பார்வையிட்டு விட்டு, தரைதளத்திற்கு வர லிப்ட் ஏறினார்.. அப்போது லிப்ட் நடுவழியிலேயே பாதியில் நிற்க அமைச்சர் மா.சு கொஞ்ச நேரம் அங்கேயே சிக்கிக் கொண்டார். பெரும் போராட்டத்திற்குப் பின்னரே அவரை வெளியே பத்திரமாக அழைத்து வந்தனர்.

மருத்துவமனைகள்

மருத்துவமனைகள்

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் லிப்ட்டை பராமரிக்காத ஊழியர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால், இதே ஏதோ ஒரு மருத்துவமனையில் நடக்கும் நிகழ்வு இல்லை. தமிழ்நாடு முழுக்க பல அரசு மருத்துவமனைகளிலும் லிப்ட் இதேபோலத் தான் உள்ளதாகப் புகார்கள் கிளம்பியுள்ளன. அமைச்சர் இப்படி லிப்டில் சிக்கியதை அடுத்து, சமீபத்தில் தான் மாநிலத்தின் ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள லிப்ட்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

லிப்ட்

லிப்ட்

இதனிடையே நாமக்கல்லில் பணிபுரியும் ஒரு மூத்த அரசு மருத்துவர் கூறுகையில், "இப்போது பொது மருத்துவமனைகள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்றாக லிப்ட் உள்ளது.. மறுபுறம், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பல அரசு மருத்துவமனைகள் இன்னும் லிப்ட் வசதி ஏற்படுத்தக் கூட இல்லை.. இந்த மருத்துவமனைகளில், மேல்மாடிக்குச் செல்லும் நோயாளிகள் சாய்வு தளத்தைப் பயன்படுத்துகிறார்கள்" என்றார்.

30% லிப்ட்கள்

30% லிப்ட்கள்

மேலும், லிப்ட் வசதியுள்ள பல மருத்துவமனைகளில் லிப் ஆப்ரேடர் இல்லாததால் நோயாளிகளே லிப்டை இயக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "தமிழ்நாடு முழுக்க சுமார் 800 லிப்ட்களை நாங்கள் பராமரித்து வருகிறது. இப்போது நடத்தப்பட்ட ஆய்வில் மாநிலத்தில் உள்ள லிப்ட்களில் சுமார் 30% லிப்ட்கள் மாற்றப்பட வேண்டிய நிலையில் இருப்பதைக் கண்டறிந்தோம்.

மாற்றப்படும்

மாற்றப்படும்

பழைய லிஃப்ட்களை அடையாளம் காணும் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்.. இந்த மாத இறுதிக்குள் இது குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பித்து விடுவோம்.. வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி கிடைத்தவுடன் லிப்ட்களை மாற்றும் பணிகளைத் தொடங்கிவிடுவோம்" என்றார். மோசமான நிலையில் இருக்கும் லிப்ட்களை அடையாளம் காண அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பாராட்டினாலும் கூட விரைவில் லிப்ட்களை மாற்ற வேண்டும் என்றும் இல்லையென்றால் மோசமான சம்பவங்கள் எதாவது நடந்துவிடும் என்றும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+