அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் விறுவிறு.. முதல் நாளில் 38 பேர் விருப்ப மனு!
முதல் நாளான இன்று அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு 38 விருப்ப மனுக்கள் வந்துள்ளன.
சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு முதல் நாளான இன்று 38 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி தவிர, அவரது பெயரில் மேலும் 37 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், தற்போது அதிமுக பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வரும் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றும், நாளையும் நடக்கிறது. வேட்புமனு பரிசீலனை 20ஆம் தேதி நடக்கிறது. வேட்பு மனுக்களை 21ஆம் தேதி மாலை 3 மணி வரை திரும்பப் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 26 ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும். மார்ச் 27ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் எடப்பாடி பழனிசாமி.
இன்று முதல் நாள் விருப்பமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. முதல் நாளான இன்று காலை 10 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை மொத்தம் 38 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் எடப்பாடி பழனிசாமி அல்லாமல் 37 பேர் எடப்பாடி பழனிசாமி பெயரிலேயே விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.

நாளையும் எடப்பாடி பழனிசாமி தரப்பிலேயே உறுப்பினர்கள் பலர் விருப்பமனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. நாளை பிற்பகல் 3 மணி வரை விருப்பமனு தாக்கல் செய்ய அவகாசம் உள்ளது. அதன்பிறகு வேறு யார் பெயரிலும் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்றால் எடப்பாடி பழனிசாமியே போட்டியின்றி வென்றதாக அறிவிக்கப்படுவார்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் விருப்ப மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் பரவியது. ஆனால், இந்த தகவலுக்கு ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சட்டவிதிகளுக்கு முரணானது என்றும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் விருப்ப மனு தாக்கல் இல்லை என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி!












Click it and Unblock the Notifications