39 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி.. புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்ஸ் கடை மூடல்!
சென்னை: சென்னை புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்ஸில் 39 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த கடை மூடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இரண்டாவது அலையால் ஏராளமானோர் பாதிக்கப்படுகிறார்கள். தினந்தோறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
கொரோனாவை காரணம் கூறி அதிகாரிகள் அத்துமீறினால்... தொடர் கடையடைப்பு... வணிகர் சங்கம் எச்சரிக்கை..!
இந்த நிலையில் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள மதர்சா துணிக் கடையில் 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த ஊழியர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை.

சரவணா ஸ்டோர்ஸ்
இதையடுத்து புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்ஸில் உள்ள 166 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில் வெள்ளிக்கிழமை 13 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. மீதமுள்ள 159 பேருக்கு சனிக்கிழமை சோதனை செய்யப்பட்டதில் 26 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. ஆக சரவணா ஸ்டோர்ஸில் 39 ஊழியர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

கண்காணித்து
இதுகுறித்து மாநகராட்சி ஊழியர்கள் கூறுகையில் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அனைவரும் இளைஞர்கள். சிலர் நோய் தொற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். சிலர் வீட்டில் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டார்கள். இவர்களுக்கு கொரோனா அறிகுறி ஏதும் இல்லை. நாங்கள் தொடர்ந்து அவர்களை கண்காணித்து வருகிறோம்.

தனிமை
அந்த சாலையில் உள்ள வீடுகளில் உள்ளவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. அவர்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டார்கள். நோய் தொற்று எங்கிருந்து பரவியது என தெரியவில்லை. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வீட்டு உபயோக பொருட்கள்
அவர்கள் எங்கும் பயணம் செய்ததாக தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து சென்னை புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்ஸ் மூடப்பட்டது. கரியப்பா சாலையில் உள்ள வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடையும் மூடப்பட்டுவிட்டது. அந்த சாலையும் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் சேர்க்கப்பட்டு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications































