நீலகிரி டூ திண்டுக்கல்.. மேற்கு தொடர்ச்சி மலையை குறி வைத்த மேக கூட்டம்! வானிலை அப்டேட்
சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நீலகிரி, கோவை உட்பட 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மே மாதம் முடிந்த பின்னரும் கூட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்தது. பல்வேறு நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெயில் பதிவாகியிருந்தது. இந்நிலையில் திடீரென எதிர்பாராத விதமாக மழை பெய்ய தொடங்கியது. கேரளாவில் பருவமழை தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டிலும் அதன் தாக்கல் பிரதிபலித்தது. முதலில் கன்னியாகுமரி திருநெல்வேலி என தொடங்கிய மழை, பின்னர் மாநிலம் முழுவதும் பரவலாக பெய்ய தொடங்கியது.

கடந்த 2 நாட்களாக சென்னையிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று நீலகிரி, கோவை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தவிர தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களிலும் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications