சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் உட்பட 4 பேர் பதவி நீக்கம்! நகராட்சி நிர்வாகத்துறை அதிரடி!
சென்னை: சென்னை மாநகராட்சியில் 2 கவுன்சிலர்கள் தாம்பரம் மாநகராட்சியில் ஒரு கவுன்சிலர் மற்றும் உசிலம்பட்டி நகராட்சித் தலைவர் ஆகியோர் உள்ளாட்சி விதிகளை மீறியதாக பதவி நீக்கம் செய்து நகராட்சி நிர்வாகத்துறை செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியின் 189வது வார்டு கவுன்சிலர் பாபு, 5வது வார்டு கவுன்சிலர் கே.பி. சொக்கலிங்கம், தாம்பரம் மாநகராட்சி 40வது வார்டு கவுன்சிலர் ஜெயபிரதீப், உசிலம்பட்டி நகராட்சி தலைவரும் 11வது வார்டு கவுன்சிலருமான சகுந்தலா ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கவுன்சிலர்கள் சிலர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, அவர்களிடம் விளக்கம் கேட்டு நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அவர்களில் தகுந்த விளக்கம் அளிக்காதவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் சென்னை மாநகராட்சியின் 5வது வார்டு கவுன்சிலர் கே.பி. சொக்கலிங்கம் (திமுக) 189வது வார்டு கவுன்சிலர் பாபு (திமுக) ஆகியோர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தாம்பரம் மாநகராட்சி சுயேட்சை கவுன்சிலர் ஜெயபிரதீப் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி தலைவர் சகுந்தலா தி.மு.கவை சேர்ந்தவர். இவர் கடந்த ஆண்டு திடீரென எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications