சரியான நேரம்.. ப.சி காவலில் சென்ற 10 நாளில் பல்வேறு திருப்பம்.. அடுத்தடுத்து அதிரடி காட்டிய நிர்மலா
Recommended Video
சென்னை: சிபிஐ காவலில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் சென்ற பின் வெறும் இரண்டு வாரத்தில் இந்திய பொருளாதாரத்தில் அதிரடி மாற்றங்கள், அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை கைது செய்ய அமலாக்கத்துறையும் தீவிரமாக முயன்று வருகிறது. இவர் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இவர் சிறையில் இருக்கும் அதே நேரத்தில் இந்தியாவின் பொருளாதாரம் ஒரு பக்கம் மிக மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இன்னும் பொருளாதாரம் பெரிய அளவில் சரிவை சந்திக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

காவல்
ப. சிதம்பரம் சிபிஐ காவலில் சென்ற பின்தான் ஆர்பிஐ அமைப்பு 1.76 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசுக்கு அளிக்க ஒப்புக்கொண்டது. இதை அதிகம் எதிர்த்தது ப. சிதம்பரம்தான். இதனால் பெரிய பொருளாதார இழப்பு ஏற்படும் என்று அவர் கூறினார். ஆனால் ப. சிதம்பரம் காவலில் இருக்கும் போதுதான் அந்த பணம் அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன்
அதேபோல் ப. சிதம்பரம் காவலில் இருக்கும் போதுதான் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார சீர்திருத்தங்களை செய்தார். நிறைய துறைகளில் வரி குறைப்பு நடவடிக்கைகளை செய்தார். இதில் சில ஐடியா ப.சிதம்பரம் கொடுத்தது. ப. சிதம்பரம் கடந்த மாதங்களில் அருண் ஜேட்லி மீது வைத்த விமர்சனங்களை பின்பற்றி நிறைய வரிக்குறைப்பு நடவடிக்கையை நிர்மலா சீதாராமன் செய்துள்ளார்.

ஜிடிபி
அதே மாதிரி ப. சிதம்பரம் காவலில் இருக்கும் போதுதான் இந்தியாவின் புதிய ஜிடிபி அறிவிக்கப்பட்டது. கடந்த காலாண்டு ஜிடிபி 5%ஆக குறைந்தது. இவ்வளவு மோசமான சதவிகிதத்தை இந்தியா பல வருடங்கள் கழித்து எட்டியுள்ளது. ப. சிதம்பரம் இந்த நேரத்தில் வெளியே இருந்திருந்தால் இதை கடுமையாக விமர்சனம் செய்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிக முக்கியம்
அதெல்லாம் போக மிக மிக முக்கியமாக ப. சிதம்பரம் காவலில் இருக்கும் போதுதான் இந்தியாவில் பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளது. வங்கிகள் இணைப்பை பல நாட்களாக கடுமையாக விமர்சித்து வந்தவர்தான் ப. சிதம்பரம். அவர் இல்லாத நேரத்தில் மிக முக்கியமான வங்கிகள் இணைக்கப்பட்டு இருப்பது கவனிக்கத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications