500 கி.மீ. தூரம் பயணித்து சென்னை வரும் சூப்பர் மிஷின்! வெள்ளத்தை சடாரென போக்கும்.. அசத்தல் டெக்னிக்
சென்னை: சென்னையில் வெள்ள நிவாரண பணிகளை துரிதப்படுத்த கோவையிலிருந்து 6 ராட்சச மோட்டார்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மிக்ஜாம் புயல் கரையை கடந்தாலும் சென்னையில் வெள்ள நீர் பெரும்பாலான இடங்களில் வடிந்த பாடில்லை. இதனால் மக்கள் உணவு, மின்சாரம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள்.

செம்பரம்பாக்கம் ஏரி நீரை திறந்துவிட்டதால் பல இடங்களில் தண்ணீர் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. அது போல் புறநகர் பகுதிகளில் நாராயணபுரம் ஏரி உடைந்துவிட்டதால் ஏராளமான நீர் வெளியேறி பொதுமக்களின் குடியிருப்புகளை சூழ்ந்துக் கொண்டது.
வேளச்சேரி, பள்ளிக்கரணை, முடிச்சூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் 5 அடிக்கு மேல் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இவை வடியாமல் இருப்பதால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. பலர் வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். தண்ணீரில் ஊறி போய் எங்கே வீடு இடிந்து விடுமோ என்ற அச்சமும் அவர்களுக்கு உள்ளது.
இந்த நிலையில்தான் கோவையில் சூப்பர் பவர் கொண்ட மோட்டார் வரவழைக்கப்பட்டுள்ளது. மோட்டார் மற்றும் பம்புகள் உற்பத்தியில் முன்னணி நகரமாக கோவை விளங்குகிறது. இங்கிருந்து விவசாய பணிகள் உள்ளிட்டவைகளுக்கு பலர் மோட்டார்களை வாங்கிச் செல்கிறார்கள். கோவை தொழில் நகரம் என துணி ஆலைகளை வைத்து மட்டும் சொல்லவில்லை.
இது போன்ற மோட்டார் உற்பத்தி ஆலைகள் இருப்பதை வைத்தும்தான் சொல்லப்படுகிறது. அது போல் வித்தியாசமான பொருட்களையும் இங்கு தயாரிக்கிறார்கள். உதாரணமாக சிறிய அளவில் போர்டபிள் சைஸ் வாட்டர் ஹீட்டர், வாட்டர் கேனில் குடை உள்ளிட்ட வித்தியாமான பொருட்களும் கிடைக்கின்றன.
கோவை தனியார் நிறுவனங்களிடம் இருந்து 6 மோட்டார்கள் வாங்கப்பட்டு அவை சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மோட்டார்களை சென்னைக்கு அனுப்பி வைத்தது இல்லாமல் அவரும் களத்தில் இறங்கி நிவாரணங்களை செய்ய சென்னைக்கு வந்துள்ளார்.
6 ராட்சத மோட்டார்களும் 10 சிறிய மோட்டார்களும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 32 கிலோ வாட்ஸ், 41 HP திறன் கொண்ட இந்த மோட்டார்கள் தண்ணீரை வேகமாக வெளியேற்றும் என சொல்லப்படுகிறது. ஏற்கெனவே என்எல்சியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட மிதக்கும் ராட்சத மோட்டார் மூலம் ஒரு நிமிடத்திற்கு ஒரு லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றி வருகிறது.
கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் சென்னை வடக்கு மண்டல துணை கமிஷனராக இரு ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். ஏற்கெனவே வெள்ளம் பாதித்த போது பணியாற்றிய அனுபவம் இவருக்கு இருக்கிறது என்பதால் இவர் கோவையிலிருந்து கிளம்பி சென்னைக்கு வந்திருக்கிறார். இவர் தற்போது வெள்ள பாதிப்பு நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications