கொரோனாவால் ஒரே நாளில் 44 பேர் மரணம்.. என்ன காரணத்தால் அதிகம் பேர் பலி. பரபர பின்னணி
சென்னை: சுகாதாரத்துறை ஜுன் 15 ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 44 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தான் ஒரு நாளில் தமிழகத்தில் கொரோனாவால் ஏற்பட்ட உச்சகட்ட உயிரிழப்பு ஆகும்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்து வருகிறது. தினமும் 1800க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதித்து வருகிறது. சென்னையில் மட்டும் சுமார் 1500 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி 46,504 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை போல் உயிரிழப்பும் கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த ஐந்து நாட்களில் சுமார் 150 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று ஒரே நாளில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் அதிகம்
கொரோனாவால் உயிரிழந்த 479 பேரில் 382 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். செங்கல்பட்டில் 27 பேர், திருவள்ளூரில் 27 பேர், காஞ்சிபுரத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள 4 மாவட்டங்களைச் சேர்ந்த 443 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

பலி எண்ணிக்கை எப்படி
தமிழகத்தின் பிற பகுதியில் மொத்தம் இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று கொரோனாவால் உயிரிழந்த 44 பேரில், 36 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். சென்னை தவிர திருவள்ளூரில் 4 பேரும், செங்கல்பட்டில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். இது தவிர கிருஷ்ணகிரியில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று கொரோனாவால் உயிரிழந்த பலரும் வயதானவர்கள் மற்றும் வேறு சில நோய் தொற்று பாதிப்பு உள்ளவர்கள் ஆவர்.வேறு சில நோய் தொற்று பாதிப்புடன் கொரோனாவும் பாதித்ததால் உயிரிழந்துள்ளனர்.

அறிகுறி இல்லாமல் பலி
தமிழகத்தில் நேற்று உயிரிழந்த 44 பேரில் 34 வயது ஆண், 44 வயது ஆண், 41 வயது ஆண், 45 வயது ஆண், 47 வயது பெண், 39 வயது ஆண், 42 வயது ஆண், 41 வயது ஆண் என 8 பேர் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். இவர்களில் பெரும்பாலானோர் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் பெரும்பாலானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 முதல் 5 நாட்களில் இறந்தவர்கள் என்பது அதிர்ச்சி தரும் தகவல் ஆகும்.

இன்றைய மரணம்
நேற்று கொரோனாவால் உயிரிழந்த 44 பேரில் 34 பேர் 650 வயதை கடந்தவர்கள் ஆவர். பெரும்பாலானோர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். நேற்றைய இறப்புகளுக்கு சுவாசிப்பதில் தோல்வி, கோவிட் நிமோனியா, இருதய நுரையீரல் அடைப்பு போன்றவை முக்கிய காரணமாக இருந்தது. குறிப்பாக 32 வயது, 34 வயது, 45 வயது, 41 வயது ஆகிய இளம் வயது நபர்கள் இறக்க சுவாசிப்பதில் ஏற்பட்ட தோல்வி முக்கிய காரணமாகும். மற்றவர்கள் இறக்க ஆக்ஸிஜன் பற்றாக்குறை, நீரழிவு, ரத்த அழுத்தம், நுரையீரல் அடைப்பு, சிறுநீரகம் செயல் இழப்பு போன்றவையும் இறக்க காரணமாக இருந்துள்ளது.
-
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications