தமிழகத்தில் இன்று 505 பேருக்கு கொரோனா.. அதிக உயிரிழப்பில் சென்னை முதலிடம்!
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 505 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. சென்னையில் 145 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரை விட குணமடைந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்து வருகிறது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரை விட குணமடைந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 505 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா உயிரிழப்பு 12,350 ஆக உயர்ந்துளளது. சென்னையில் மட்டும் 4,098 பேர் கொரோனாவுக்கு இதுவரை இறந்துள்ளனர். சென்னையில் இன்று 145பி பேர் கொரோனாவால் பாதிக்கபப்ட்டுட்டள்ளனர். தமிழகத்தில் 33-வது நாளாக ஆயிரத்துக்கு கீழ் பாதிப்பு பதிவாகி உள்ளது.
கொரோனாவுக்கு 4,575 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 526 பேர் டிஸ்சார்ஜ் செய்யபப்ட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,20,907 ஆக அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications