சென்னையில் மின்சார ரயிலில் போவீங்களா.. 66 ரயில்கள் ரத்து.. சிறப்பு ரயில் நேரத்தை நோட் பண்ணுங்க
சென்னை: சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக இன்று 8 மின்சார ரயில்களும், நாளை 58 மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் பட்டாபிராம் மற்றும் அம்பத்தூர் ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால் இன்று (சனிக்கிழமை) 8 ரயில்களும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) 58 மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

தெற்கு ரயில்வே இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "பட்டாபிராம் மற்றும் அம்பத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் காரணமாக சனிக்கிழமை இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி வரை சென்னை சென்ட்ரல், சென்னை கடற்கரையிலிருந்து அரக்கோணம், பட்டாபிராம், திருவள்ளூர், திருத்தணி செல்லும் மின்சார ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படும்.
அதன்படி, சென்னை சென்ட்ரலில் சனிக்கிழமை இரவு செல்லும் 6 ரயில்களும், அரக்கோணம், திருத்தணியிலிருந்து இரவு புறப்படும் தலா ஒரு ரயிலும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், சென்னை சென்ட்ரலில் பட்டாபிராமுக்கு இரவு 10.35 மணிக்கு செல்லும் ரயிலும், அரக்கோணத்திலிருந்து சென்ட்ரலுக்கு இரவு 7.55 மணிக்கு வரும் ரயிலும் ஆவடியுடன் நிறுத்தப்படும்.
தொடர்ந்து, சென்னை சென்ட்ரல், கடற்கரை - ஆவடி, பட்டாபிராம், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, பொன்னேரி இடையே அதிகாலை முதல் காலை 10 மணி வரை இயக்கப்படும் 58 மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 5ம் தேதி) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
அதாவது சென்னை மூர்மார்கெட்டிலிருந்து அரக்கோணத்துக்கு நவம்பர் 4ம் தேதியான இன்று இரவு 10 மணி, 10.45 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், மறுமார்க்கமாக அரக்கோணத்தில் இருந்து 10.50 மணிக்கு புறப்படும் ரயில், மூர்மார்க்கெட்டிலிருந்து ஆவடிக்கு இரவு 10.20, 11.45 மணிக்கு புறப்படும் ரயில், மூர்மார்கெட்டிலிருந்து திருவள்ளூருக்கு இரவு 11.15 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், மூர்மார்கெட்டிலிருந்து பட்டாபிராமுக்கு இரவு 11.55 மணிக்கு புறப்படும் ரயில் ஆகியவை இன்று ரத்து செய்யப்படுகிறது
அதேநேரம் பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரலிலிருந்து திருத்தணிக்கு அதிகாலை 3.30, காலை 7.40 மணிக்கும், பட்டாபிராமுக்கு அதிகாலை 4.15 மணிக்கும், திருவள்ளூருக்கு அதிகாலை 4.30, காலை 8.40, 9.15, 10 .00 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அரக்கோணத்துக்கு காலை 6.30, 7.00, 8.20, 9.10, 9.50 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. மறுமார்க்கமாக அரக்கோணத்திலிருந்து காலை 5.25, 6.20, 6.40, 7.10, 8.00, 8.50 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
ஆவடியிலிருந்து அதிகாலை 3.50, 4.25, 4.35, காலை 6.40 மணிக்கும், திருத்தணியில் இருந்து காலை 6.30, 7.00, 8.50 மணிக்கும், திருவள்ளூரிலிருந்து காலை 6.50, காலை 7.15, காலை 7.40, காலை 9.10, காலை 9.25 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்" இவ்வாறு தெற்கு ரயில்வே தனது அறிவிப்பில் கூறியுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications