தொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்பு: தமிழகத்தில் இன்று 695 பேருக்கு கொரோனா!
சென்னை: தமிழகத்தில் இன்று 695 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.சென்னையில் 271 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்த கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று 695 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8,58,967 ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவுக்கு மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 12,543 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் 271 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் மேலும் 65,124 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 1,78,99,028 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 65,295 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
இதுவரை மொத்தம் 1,82,17,281 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 65 பாதிப்புகள் பதிவாகின. கோயம்புத்தூரில் 54 பாதிப்புகளும், திருவள்ளூரில் 40, காஞ்சிபுரத்தில் 24 பாதிப்புகளும் பதிவாகின.