சென்னையை அடுத்தடுத்து 7 புயல்கள் தாக்கப்போகிறதா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
Recommended Video
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம்... இன்று முதல் மீண்டும் மழை- வீடியோ
சென்னை: சென்னையை, 7 புயல்கள் தாக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் உலவும் செய்திகளுக்கு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர், பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த அவரிடம், 7 புயல்கள் சென்னையை தாக்கப்போவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவுகிறதே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த, பாலச்சந்திரன், "இவ்வாறான தகவல்களில் உண்மை கிடையாது. வங்கக் கடலில் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக மட்டுமே வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில், அக்டோபர் 1 முதல் நவம்பர் 20ம் தேதிவரை பெய்த மழை அளவு, வழக்கமாக இதே காலகட்டத்தின், இயல்பை விட 20 சதவீதம் குறைவாகும். சென்னையில், 60 சதவீத மழைப் பற்றாக்குறை உள்ளது" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Comments
English summary
7 cyclones may hit Chennai says social media, but Chennai meteorological denies.
Story first published: Monday, November 19, 2018, 13:17 [IST]