சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழ்நாட்டில் இன்று 756 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 14 பேர் பலி.. 847 பேர் டிஸ்சார்ஜ்!

Google Oneindia Tamil News

சென்னை; தமிழ்நாட்டில் இன்று 756 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

புதிய கேஸ்கள் 800க்கு கீழ் கடந்த ஒரு வாரமாக பதிவாகி வருகிறது. அதோடு டிஸ்சார்ஜ் செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கையும் புதிய கேஸ்களை விட அதிகமாகவே உள்ளது.

4 KM தூரம் நின்ற வாகனங்கள்; முடிவு தெரியாமல் கலைய மறுத்த மக்கள்; ஸ்தம்பித்த சென்னை -பெங்களூர் ஹைவே! 4 KM தூரம் நின்ற வாகனங்கள்; முடிவு தெரியாமல் கலைய மறுத்த மக்கள்; ஸ்தம்பித்த சென்னை -பெங்களூர் ஹைவே!

இதனால் ஆக்டிவ் கேஸ்கள் தமிழ்நாட்டில் குறைவாகவே உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 27,20,271 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது

 டிஸ்சார்ஜ்

டிஸ்சார்ஜ்

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 847 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 26,75,174 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 8,722 ஆக உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,00,767 கொரோனா மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது.

சோதனை

சோதனை

இதுவரை 5,33,58,226 மாதிரிகள் தமிழ்நாட்டில் சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 15,87,705 ஆண்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 11,32,528 பெண்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பலி

பலி

கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் தமிழ்நாட்டில் பலியாகி உள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை 36,375 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 112 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 1299 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

மற்ற மாவட்டங்கள்

மற்ற மாவட்டங்கள்

கோவையில் 130 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோவையில் 1230 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். ஈரோட்டில் 80 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோட்டில் 810 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 56 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 693 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

டோஸ்கள்

டோஸ்கள்


தமிழ்நாட்டில் இதுவரை 6,56,01,145 டோஸ்கள் கொரோனா வேக்சின் போடப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் 4,35,62,189 பேருக்கு ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. 2,20,38,956 பேருக்கு இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. இன்று மெகா வேக்சின் முகாமில் தற்போது வரை 13,12,059 பேருக்கு வேக்சின் டோஸ் போடப்பட்டுள்ளது.

English summary
756 People tested positive for Coronavirus in Tamilnadu: Active cases are going down in the state everyday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X