திருவண்ணாமலை மக்களுக்கு குட் நியூஸ்! மே 23ம் தேதி முதல் கிளாம்பாக்கம் போக தேவையில்லை! ஏன் என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் 23 ஆம் தேதி தினசரி 85 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு புதிதாக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் பயணிகளும், கோயம்பேடு சந்தை, சுற்றுவட்டார பகுதிகளில பணியாற்றும் பயணிகளும் திருவண்ணாமலைக்கு கோயம்பேட்டிலிருந்து பேருந்துகளை இயக்க தொடர்ந்து கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர்.

85 buses to be operated from Koyambedu to Thiruvannamalai

கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கம் சென்று அங்கிருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் பேருந்துகளில் பயணிப்பதில் உள்ள நடைமுறை பிரச்சினைகளையும் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து இவர்களுடைய கோரிக்கையை தமிழக போக்குவரத்து துறை ஏற்றது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் 23 ஆம் தேதி முதல் தினசரி 85 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பயணிகள் வரவேற்றுள்ளனர்.

போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம், செஞ்சி வழியாக 90 பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும், சென்னை-கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 44 பேருந்துகள், ஆற்காடு, ஆரணி வழியாகவும் மற்றும் தற்போது தினசரி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம், வந்தவாசி வழியாக இயக்கப்படும் 11 பேருந்துகளுடன் 30 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்.

மொத்தம் 85 பேருந்துகள் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு தினசரி இயக்கப்படும். இந்த பேருந்து வசதியை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது முதல் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும் பேருந்து பயணிகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்ல மாநகர பேருந்து வசதி இல்லாததால் ஆட்டோ, டாக்ஸிகளுக்கு பணம் செலவு செய்து செல்வதாக குற்றம்சாட்டப்பட்டது.

தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தான் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் திருவண்ணாமலைக்கு இனி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+