சசிகலா உறவினர் இளவரசி வீட்டில் 95 சவரன் கொள்ளை.. காவலாளிக்கு போலீஸ் வலை
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சசிகலா உறவினர் இளவரசி வீட்டில் 95 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
சொத்து குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹார சிறையில் இளவரசி, சசிகலா மற்றும் சுதாகரன் ஆகியோர் உள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் இளவரசியின் வீடு உள்ளது.

இந்நிலையில் இங்கு யாரும் இல்லாத நிலையில் வீட்டில் போலி சாவி போட்டு திறந்து 95 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த கொள்ளையில் இளவரசியின் வீட்டு காவலாளி அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கோனாக்கு தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து தலைமறைவாக உள்ள கோனாக்கை போலீஸார் தேடி வருகின்றனர். ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி மர்மமான முறையில் கொல்லப்பட்டதாகவும் அங்கு சில பொருட்கள், ஆவணங்கள் காணாமல் போனதாகவும் கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது சசிகலா உறவினர் வீட்டிலும் கொள்ளை நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications