Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் வெள்ளம்...போரூர் அருகே அடித்து செல்லப்பட்ட கார்.. ஆனாலும் அதிசயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீரில் கார் அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நல்லவேளையாக காரில் இருந்த 3 பேரையும் போலீசார் கயிறு கட்டி மீட்டனர்.

வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்த காரணத்தால் சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கன மழையால் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் அருகே செம்பரம்பாக்கத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீா்வரத்து அளவு 3,328 கன அடியாக அதிகரித்து வந்ததால் ஏரியின் நீரளவு வேகமாக உயா்ந்தது.

a car was swept away by the excess water released from Chennais chembarambakkam lake

இதனால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு நேற்று அதிரடியாக அதிகரிக்கப்பட்டது. சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீா் ஆதாரங்களில் ஒன்றான இந்த ஏரி 25.51 சதுர கிலோ மீட்டா் பரப்பளவில் இருக்கிறது. ஏரியின் முழுக் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியாழக்கிழமை காலை 8 மணிக்கு ஏரியிலிருந்து உபரி நீா் திறப்பு வினாடிக்கு 2,429 கனஅடியில் இருந்து 6,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீா் செல்லும் கால்வாயின் கரையோரம் வசிக்கும் வழுதலம்பேடு, சிறுகளத்தூா், திருமுடிவாக்கம், குன்றத்தூா், காவனூா் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் அடையாற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதேபோல் அடையாறு கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் தரப்பாக்கம் அருகே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீரில் கார் அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நல்லவேளையாக காரில் இருந்த முகமது ரபிக், அவரது மனைவி மற்றும் 10 வயது குழந்தை என 3 பேரையும் அப்பகுதி மக்கள் உதவியுடன் மாங்காடு போலீசார் கயிறு கட்டி பத்திரமாக கரை சேர்த்தனர்.

இதனிடையே செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு இன்று கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு 402 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 4,000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று 402 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மழை, நீர் வரத்து குறைவு காரணமாக நீர்மட்டம் 22 அடிக்கும் கீழ் சென்றதால் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னைக்கு குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரியில் இருந்து 2வது நாளாக 2000 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. நீர்இருப்பு 3006 மில்லியன் கனஅடியாக இருக்கிறது. நீர்வரத்து 985 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதேபோல் சோழவரம் ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு வெளியேற்றப்படும் உபரிநீர் 350 கனஅடியில் இருந்து 600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சோழவரம் ஏரியில் சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 816 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 242 கனஅடியாக சரிந்துள்ளதுது. சென்னைக்கு குடிநீர் ஆதராமாக விளங்கும் கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 470 மில்லியன் கனஅடியாக உள்ளது.

சென்னை: சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீரில் கார் அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நல்லவேளையாக காரில் இருந்த 3 பேரையும் போலீசார் கயிறு கட்டி மீட்டனர்.

வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்த காரணத்தால் சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கன மழையால் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் அருகே செம்பரம்பாக்கத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீா்வரத்து அளவு 3,328 கன அடியாக அதிகரித்து வந்ததால் ஏரியின் நீரளவு வேகமாக உயா்ந்தது.

இதனால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு நேற்று அதிரடியாக அதிகரிக்கப்பட்டது சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீா் ஆதாரங்களில் ஒன்றான இந்த ஏரி 25.51 சதுர கிலோ மீட்டா் பரப்பளவில் இருக்கிறது. ஏரியின் முழுக் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வியாழக்கிழமை காலை 8 மணிக்கு ஏரியிலிருந்து உபரி நீா் திறப்பு வினாடிக்கு 2,429 கனஅடியில் இருந்து 6,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீா் செல்லும் கால்வாயின் கரையோரம் வசிக்கும் வழுதலம்பேடு, சிறுகளத்தூா், திருமுடிவாக்கம், குன்றத்தூா், காவனூா் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் அடையாற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்படட்து. அதேபோல் அடையாறு கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் தரப்பாக்கம் அருகே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீரில் கார் அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நல்லவேளையாக காரில் இருந்த காரில் இருந்த முகமது ரபிக், அவரது மனைவி மற்றும் 10 வயது குழந்தை என 3 பேரையும் அப்பகுதி மக்கள் உதவியுடன் மாங்காடு போலீசார் கயிறு கட்டி பத்திரமாக கரை சேர்த்தனர்.

இதனிடையே செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு இன்று கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு 402 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 4,000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று 402 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மழை, நீர் வரத்து குறைவு காரணமாக நீர்மட்டம் 22 அடிக்கும் கீழ் சென்றதால் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னைக்கு குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரியில் இருந்து 2வது நாளாக 2000 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. நீர்இருப்பு 3006 மில்லியன் கனஅடியாக இருக்கிறது. நீர்வரத்து 985 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதேபோல் சோழவரம் ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு வெளியேற்றப்படும் உபரிநீர் 350 கனஅடியில் இருந்து 600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சோழவரம் ஏரியில் சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 816 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 242 கனஅடியாக சரிந்துள்ளதுது. சென்னைக்கு குடிநீர் ஆதராமாக விளங்கும் கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 470 மில்லியன் கனஅடியாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+