திங்கள் கிழமைக்காக காத்து இருக்கிறேன்.. எஸ்.பி.பி பற்றி நல்ல செய்தி வரும்.. எஸ்.பி சரண் குட் நியூஸ்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் எஸ்.பி பாலசுப்பிரமணியம் குறித்து திங்கள் கிழமை நல்ல செய்தி வரும் என்று அவரின் மகன் எஸ்.பி சரண் தெரிவித்துள்ளார்.
சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் எஸ்.பி பாலசுப்பிரமணியம் குறித்து திங்கள் கிழமை நல்ல செய்தி வரும் என்று அவரின் மகன் எஸ்.பி சரண் தெரிவித்துள்ளார்.
பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாடகர் எஸ்.பி.பி கடந்த மாதம் 5ம் தேதி கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டார்.
இவரின் உடல்நிலை தற்போது இயல்புநிலையில் இருக்கிறது. பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் தற்போது சென்னையில் அமைந்தகரையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எப்படி இருக்கிறார்
தற்போது இவருக்கு நினைவு திரும்பி உள்ளது. இடையில் இவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. ஆனால் தற்போது அந்த பாதிப்புகளில் இருந்து மீண்டு வந்துள்ளார். எஸ்.பி பாலசுப்பிரமணியம் நன்றாக தற்போது மூச்சு விடுகிறார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தாலும் இவரின் உடல்நிலை வேகமாக முன்னேறி வருகிறது.

மகன் என்ன சொன்னார்
எஸ்.பி.பி உடல்நிலை குறித்து அவரின் மகன் எஸ்.பி சரண் பேட்டி அளித்துள்ளார். அதில், அப்பா உடல் நிலை முன்னேற்றம் அடைந்து 4 நாட்கள் ஆகிறது. அவரின் உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். விரைவில் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம். இந்த வாரம் இறுதிக்குள் அவரின் உடல்நிலை முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் வேண்டுதல்
அவருக்காக உலகம் முழுக்க மக்கள் வேண்டி வருகிறார்கள். உலகம் முழுக்க பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். கடவுள் அனுக்கிரகம் அவருக்கு எப்போதும் இருக்கும். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உங்களின் பிரார்த்தனை காரணமாக கண்டிப்பாக என் அப்பா உடல்நிலை மொத்தமாக சரியாகும் .

திங்கள் கிழமை
வரும் திங்கள் கிழமை நல்ல செய்தி வரும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நல்ல செய்திக்காக காத்து இருக்கிறேன், என்று எஸ். பி சரண் குறிப்பிட்டு இருக்கிறார். அவரின் இந்த செய்தி மக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எஸ்.பி.பி விரைவில் மீண்டு வருவார். ஆரோக்கியமாக அவர் மீண்டும் சினிமாவில் பாடுவார் என்று பலர் எதிர்பார்த்துக் கொண்டு உள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications