ஷாக்கான மக்கள்.. மீனவர்கள் அச்சம்.. சென்னையில் பல பீச்களில் குவிந்த மர்ம நுரை படலம்.. என்ன பின்னணி?
சென்னையில் பல பீச்களில் திடீர் என்று மர்ம நுரை படலம் கரை ஒதுங்கியது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
சென்னை: சென்னையில் பல பீச்களில் திடீர் என்று மர்ம நுரை படலம் கரை ஒதுங்கியது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான முழு விபரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
பட்டினபாக்கம் அடுத்துள்ள சீனிவாசபுரம் கடற்கரை பகுதியிலும், இராயப்பேட்டை அருகே இருக்கும் மற்ற கடல் பகுதியிலும் இன்று அதிக அளவில் நுரை கரை ஒதுங்கியது. மொத்தமாக கரையை மூடும் அளவிற்கு நுரை கரை ஒதுங்கியது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் கடல் பகுதி வண்ண நிறமாக மாறியது. அப்போது கடலில் ஏற்பட்ட மாசு தன்மைதான் இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.

மாசு படலம்
இந்த நிலையில் தற்போது உருவாகி உள்ள நுரை படலத்திற்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது. அதன்படி சென்னையில் உள்ள அடையார் ரசாயன ஆலைகள் காரணமாக இந்த நுரை ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள். அங்கு இருக்கும் ரசாயன ஆலைகளில் இருந்து அதிக அளவில் கழிவு நீர் கடலில் கலக்கிறது. இதனால் நுரை ஏற்பட்டு இருக்கலாம்.

இரண்டு நாட்கள்
அதேபோல் இன்னொரு பக்கம் கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. பொதுவாக இந்த கழிவு நீர் கடலில் கலந்ததும், ஆழத்திற்கு சென்றுவிடும். ஆனால் மழை காரணமாக கடலில் தற்போது அதிக தண்ணீர் சேர்கிறது. இதனால் கடலும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

கழிவு நீர்
ஆகவே கழிவு நீர் கடலுக்குள் செல்லாமல், வெளியே வந்து நுரையாக மாறி கரைக்கு வருகிறது என்று கடலியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மீனவர்கள், அங்கு இருக்கும் மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர். இன்னும் சில நாட்களுக்கு இந்த நுரை இப்படிதான் இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.

மீன்கள் வாய்ப்பு
இதனால் மீன்கள் அதிக அளவில் பலியாக வாய்ப்புள்ளது. கடல் அதிக அளவில் மாசு ஆனதுதான் இதற்கு காரணம். இந்த பருவமழை முடியும் வரையில் இந்த நுரை காணப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்!












Click it and Unblock the Notifications