''தமிழகம் வரும் சசிகலாவுக்கு பாதுகாப்பு கொடுங்க''... போலீஸ் டிஜிபியிடம் மனு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் வரும் சசிகலாவுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று போலீஸ் டிஜிபியிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று விடுதலையான சசிகலாவ பிப்ரவரி 8-ம் தேதி தமிழகம் வரவுள்ளார்.

A petition has submitted to the TN Police DGP to provide adequate security to Sasikala

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இதற்கிடையே கொரோனா தொற்று காரணமாக அவர் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சைமுடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி ரெசார்ட்டுக்கு சென்றபோது சசிகலா தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தியதற்கு எதிராக அமைச்சர்கள் ஜெயக்குமார் உள்ளிட்டோர் நேற்று டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

எம்.ஜி.ஆர் வளர்ப்பு மகள்களான கீதா, ராதா ஆகியோர் இன்று அமமுக சார்பில் சசிகலா கொடியேற்றும் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சசிகலா கொடியேற்றுவதற்காக கம்பம் நட, பேனர் வைக்க தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.இந்த நிலையில் தமிழகம் வரும் சசிகலாவுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று போலீஸ் டிஜிபியிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

பெரியகுளம் மேற்கு ஒன்றிய அம்மாபேரவை தலைவர் வைகை சாந்தகுமார் என்பவர், ''பிப்ரவரி 8-ம் தேதி தமிழகம் வரவுள்ள சசிகலாவுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்று தபால் மூலம் டிஜிபிக்கு மனு அனுப்பி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+