இடிந்து விழும் நிலையில் தபால் நிலையம்.. பீதியில் பொதுமக்கள்.. பாரிமுனையில் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் பாரிமுனையில் தபால் நிலையம் ஒன்று இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை பாரிமுனையில் உள்ள ராஜாஜி சாலையில் பழைய கட்டடத்தில் தலைமை தபால் நிலையம் இயங்கி வருகிறது. இந்தக் கட்டடத்தின் மேற்கூரையில் உள்ள கூம்பு வடிவிலான பகுதி இடிந்து தொங்கி கொண்டிருக்கிறது.

இந்த கட்டடம் மிகவும் பழமையான கட்டடம் என்பதால் எப்போது வேண்டுமானாலும் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளது. பாரிமுனையின் முக்கிய சாலையான ராஜாஜி சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், வாகனங்களும் சென்று கொண்டிருக்கின்றன.

கட்டடத்தின் மேற்கூரை பகுதி இடிந்து ஆபத்தான நிலையில் இருப்பதால் அதை சுற்றி, பொதுமக்கள் யாரும் செல்லாத வகையில் போலீசார் தடுப்புகளை அமைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications