Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோயம்பேட்டில் வாடகைக்கு வீடு விட்டவருக்கு வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம்.. சிக்கிய ஜோடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வீட்டை வாடகைக்கு விடும் உரிமையாளர்கள் கவனமாக இல்லாவிட்டால் பணம், நகையை பறி கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. குறிப்பாகவீடுகளில் சிசிடிவி கேமரா உள்ளேயும், வெளியேயும் வைத்துக்கொள்ளுங்கள். அப்படி செய்துவிட்டால், நீங்கள் அசந்த நேரத்தில் உங்கள் பணத்தை யாராவது திருட முயன்றால், அல்லது திருடி சென்றால் கண்டுபிடித்துவிட முடியும். அப்படித்தான் வீட்டின் உரிமையாளர் வீட்டில் ரூ.9 லட்சம் திருடிய ஆட்டோ டிரைவர், தனது தோழியுடன் கைது செய்யப்பட்டார்.

வாடகை வீடுகளில் சில தர்ம சங்கடமான நிகழ்வுகளை அடிக்கடி இப்போது மக்கள் சந்திக்கிறார்கள். திடீரென வீட்டில் வைத்துள்ள பணம் காணாமல் போய்விடும். சிறுக சிறுக பணம் காணாமல் போயிருக்கும். சில நேரங்களில் நகையே மாயமாகி இருக்கும். வாடகைக்கு குடியிருக்கும் ஒரு சிலர் சபலத்தில் திருடுவதே இதற்கு காரணமாக இருக்கிறது. சில நேரங்களில் வீட்டின் உரிமையாளர், வாடகை வீட்டில் நுழைந்து திருடிய சம்பவங்களும் நடந்துள்ளது. வீடுகளில் டிவி இருப்பதை போல சிசிடிவி இருப்பது தான் உங்களை காப்பாற்றும். சென்னையில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

A tenant in Koyambedu Chennai was arrested for stealing from his landlord s house

நெற்குன்றம் வாடகை வீடு

சென்னை நெற்குன்றம், சக்தி நகரைச் சேர்ந்த 40 வயதாகும் கார்த்திகேயன் என்பவர் 2 மாடிகள் கொண்ட வீட்டின் தரைத்தளத்தில் 'டிஷ்யூ' பேப்பர் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். வீட்டின் 2-வது மாடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். முதல் தளத்தில் உள்ள வீட்டில் ஆட்டோ டிரைவரான 25 வயதாகும் நிதீஷ்குமார் என்பவர் வாடகைக்கு வசித்து வருகிறார்.

வீட்டில் 9 லட்சம் திருட்டு

கடந்த டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் அன்று விடுமுறை காரணமாக கார்த்திகேயன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று விட்டார். பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ரூ.9 லட்சம் மற்றும் வெளிநாட்டு பணம் திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் பூட்டு உடைக்கப்படாத நிலையில் பணம் திருட்டு போனது தெரியவந்தது. இதனால் தெரிந்தவர்களே கை வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இது குறித்து கோயம்பேடு போலீசில் கார்த்திகேயன் புகார் அளித்தார். அவர்கள் வழக்கு பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார்கள்.

ஆட்டோ டிரைவர் தோழியுடன் கைது

அதில், அவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வரும் ஆட்டோ டிரைவர் நிதிஷ்குமார், தனது தோழியான 21 வயதாகும் சிநேகா சம்பத்குமார் என்பவருடன் சேர்ந்து கார்த்திகேயன் வீட்டில் பணத்தை திருடியது தெரியவந்தது. சம்பவத்தன்று கார்த்திகேயன் வீட்டை பூட்டிவிட்டு சாவியை ஒரு இடத்தில் மறைத்து வைத்து விட்டு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட நிதிஷ்குமார், அந்த சாவியை எடுத்து கதவை திறந்து கைவரிசை காட்டியது தெரிந்தது. நிதீஷ் குமார், அவரது தோழி என 2 பேரையும் கைது செய்த போலீசார், இவர்களிடம் இருந்து ரூ.66 ஆயிரம் பணம் மற்றும் ரூ.56 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+