ஸ்விட்ச் ஆஃப் ஆன கிருஷ்ணாவின் செல்போன்! போதை பொருள் விவகாரத்தில் சம்மன் போன அடுத்த நொடி தலைமறைவு?
சென்னை: போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக நடிகர் கிருஷ்ணாவுக்கு போலீசார் சம்மன் கொடுத்துள்ளனர். சென்னையில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் சம்மன் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது செல்ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நடிகர் கிருஷ்ணா தலைமறைவிட்டதாக போலீசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
ரோஜா கூட்டம், பார்த்திபன் கனவு, நண்பன் உள்ளிட்ட படங்களில் நடித்த ஸ்ரீகாந்த், போதைப்பொருள் பயன்படுத்தியதாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக நிர்வாகி பிரசாத் என்பவர் மூலமாக கொக்கைன் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு ஸ்ரீகாந்த் அடிமையாகி இருக்கிறார். அதிமுக நிர்வாகி பிரசாத் மீது ஏற்கனவே வேலை வாங்கி தருவதாக மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது.

அடிமையானது எப்படி?
பெங்களூரில் இருந்து பிரதீப் குமார் என்பதை கடத்தி வந்து, பிரசாத்திற்கு விற்பனை செய்துள்ளார். இதனிடையே பிரசாத் தயாரித்த ஒரு படத்திற்காக ஸ்ரீகாந்த்-க்கு ரூ.10 லட்சம் சம்பள பாக்கி இருந்துள்ளது. இந்த சம்பளத்தை கேட்ட போதெல்லாம், பிரசாத் கொக்கைன் போதைப் பொருளை கொடுத்துள்ளார். 3 முறைக்கு மேல் பயன்படுத்திய பின், ஸ்ரீகாந்த் கொக்கைன் போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்டதாக கூறி இருக்கிறார்.
புலம்பிய ஸ்ரீகாந்த்
இதுதொடர்பாக சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலான கானா நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஸ்ரீகாந்தின் ரத்த மாதிரிகளை சோதனை மேற்கொண்ட போது, அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதியாகி இருக்கிறது. இதன்பின் நீதிபதிகளிடம் நான் தவறு செய்துவிட்டேன் என்று புலம்பி இருக்கிறார்.
சம்மன் அளித்த போலீஸ்
இதன்பின் ஸ்ரீகாந்த் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிடப்பட்ட நிலையில், அவருக்கு முதல் வகுப்பு சிறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் நுங்கம்பாக்கம் போலீசார் தரப்பில் சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் கிருஷ்ணா கேரளாவில் படப்பிடிப்புக்காக சென்றிருக்கிறார்.
தலைமறைவு?
சென்னையில் உள்ள கிருஷ்ணாவின் குடும்பத்தினரை அணுகி போலீசார் விசாரித்துள்ளனர். அதன்பின் குடும்பத்தினர் மூலமாக கிருஷ்ணாவை அணுகிய போலீசார், விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். இதன்பின் கிருஷ்ணா வருவதாக கூறிவிட்டு, அடுத்த சில நிமிடங்களில் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துள்ளார். இதனால் கிருஷ்ணா தலைமறைவாகிவிட்டதாக போலீசார் கூறி இருக்கின்றனர். அதேபோல் கிருஷ்ணாவுக்கு அளிக்கப்பட்ட சம்மனுக்கு அவர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம் அளிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications