Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை ஹாடோஸ் சாலையில் வேகமாக வந்த மன்சூர் அலிகான் மகன் கார்! திடீரென மரத்தில் மோதி விபத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் சென்ற கார் சென்னையில் இன்றைய தினம் விபத்துக்குள்ளானது சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

சென்னை ஹாடோஸ் சாலையில் இருந்து உத்தமர் காந்தி சாலை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, துக்ளக் ஓட்டிய கார் அதிவேகத்தில் சென்றது. திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது.

Mansoor Alikhan

இதனால் கார் தலைகீழாக கவிழ்ந்து கடுமையான சேதத்துக்கு உள்ளானது. விபத்தின் தீவிரத்தை பார்க்கும் போது பெரிய அளவில் ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றாலும், நல்வாய்ப்பாக துக்ளக் உயிர் தப்பினார். அவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்று தெரிகிறது.

போலீசார் இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். அதிவேகம் முக்கிய காரணமாக இருந்தாலும், விபத்து நேரத்தில் துக்ளக் மது அருந்தியிருந்தாரா என்பது குறித்து போதை சோதனை உள்ளிட்ட ஆய்வுகள் நடைபெறுகின்றன.

விபத்து நடந்த இடத்தில் கார் மிகுந்த சேதமடைந்த நிலையில், சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறியதால் இது நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மன்சூர் அலிகான் கடந்த காலங்களில் தனது மகன் தொடர்பான சில சர்ச்சைகளில் ஈடுபட்டிருந்த நிலையில், இந்த விபத்து செய்தி மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.

சமூக வலைதளங்களில் இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் "மன்சூர் அலிகான் மகனுக்கு எச்சரிக்கை தேவை" என்றும், மற்றவர்கள் "அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது" என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது துக்ளக் மருத்துவ சிகிச்சையில் உள்ளார். விபத்து குறித்து முழுமையான விசாரணை முடிவுகள் வெளியாகும் போது மேலும் விவரங்கள் தெரிய வரும்.

கடந்த 2024- ஆம் ஆண்டு சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு போன் மூலம் போதை பொருள்களை விற்றதாக கல்லூரி மாணவர்கள் 5 பேர் ஜெ.ஜெ. நகர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மண்ணடியை சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி தனியார் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் மெத்தபெட்டமைன் போதைப் பொருளையும் விற்பனை செய்ததாக சொல்லப்படுகிறது.

கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்த புகாரில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்கிற்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. இந்த நிலையில் அவரை போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்திருந்தனர். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் துக்ளக் ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+